Islamic Widget

August 23, 2011

தே.மு.தி.க., பேனர் கிழிப்பு : சிதம்பரம் அருகே மறியல்

பரங்கிப்பேட்டை : கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே பேனர் கிழித்ததை கண்டித்து தே.மு.தி.க., வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அடுத்த மஞ்சக்குழி மெயின் ரோட்டில் கட்சி நிர்வாகிகள் பேனர் வைத்திருந்தனர். மர்ம நபர்கள் நேற்று பேனர் நடுவில் கிழித்து சேதப்படுத்தியிருந்தனர். ஆத்திரமடைந்த கிளை நிர்வாகிகள் ஒன்றிய செயலர் மணிகண்டதேவன் தலைமையில் சாலை மறியிலில் ஈடுப்பட்டனர். டி.எஸ்.பி., நடராஜன் மற்றும் போலீசார் @த.மு.தி.க., மாவட்டச் செயலர் சசிகுமாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேனர் கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. மறியலால் சிதம்பரம் - கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

source: dinamalar

No comments:

Post a Comment