Islamic Widget

August 24, 2011

பரங்கிப்பேட்டையில் இருதரப்பு மோதல் சிதம்பரத்தில் அமைதி பேச்சுவார்த்தை

பரங்கிப்பேட்டை: சிதம்பரம் அடுத்த பரங்கிப்பேட்டையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக ஆர்.டி.ஓ., இந்துமதி தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. சிதம்பரம் அடுத்த பரங்கிப்பேட்டையில் முஸ்லிம் - மீனவர் இளைஞர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்னை இரு தரப்பு மோதலாக மாறியது. இதனால் இரு பிரிவினர்களுக்கிடையே தொடர்ந்து பிரச்னை இருந்து வந்தது. அதற்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று சிதம்பரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. ஆர்.டி.ஓ., இந்துமதி தலைமை தாங்கினார். டி.எஸ்.பி., நடராஜன், தாசில்தார் ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள், மீனவர்கள் தரப்பில் செழியன், முஸ்லிம்கள் சார்பில் பேரூராட்சி தலைவர் யூனுஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், இரு பிரிவினரும் தங்கள் மீது போடப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய கோரிக்கை வைத்தனர். அது குறித்து கோர்ட் முடிவு செய்ய வேண்டும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வரும் காலங்களில் முஸ்லிம்கள் மற்றும் மீனவர்கள் சகோதரத்துவத்துடன் இருக்க வேண்டும். அவரவர் பிரிவில் தவறு செய்பவர்களை கண்டிக்க வேண்டும். கட்டுப்பாட்டை மீறி நடப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

source: dinamalar

No comments:

Post a Comment