நில அபகரிப்பு புகாரில் கைது செய்யப் பட்டுள்ள மதுரை மாவட்டச் செயலாளர் தளபதி மற்றும் பொட்டு சுரேஷ் உள்ளிட்ட முக்கிய திமுக பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.சிறையில் அடைக்கப் பட்டுள்ள தளபதி மற்றும் பொட்டு சுரேஷ் ஆகியோரைக் காண மத்திய அமைச்சர் அழகிரி இன்று நெல்லை வந்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்
ஐ.பெரியசாமியும் உடன் வந்து இருந்தார். கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ள தளபதி, பொட்டு சுரேஷ் உள்ளிட்டோரை மத்திய அமைச்சர் அழகிரி இன்று சந்தித்துப் பேசினார்.அழகிரியுடன் முன்னாள் அமைச்சர்கள் பெரியசாமி, மைதீன் கான் உள்ளிட்டோரும் உடன் சென்று இருந்தனர்.
No comments:
Post a Comment