Islamic Widget

June 10, 2011

புவனகிரி: தீயில் பாதித்தவர்களுக்கு அமைச்சர் நிவாரணம்

புவனகிரி : புவனகிரியில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அமைச்சர் செல்வி ராமஜெயம் நிவாரண உதவி வழங்கினார். புவனகிரி ஆட்டு தொட்டித் தெருவில் 7ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு பெண் குழந்தை இறந்தது. மேலும் 31 வீடுகள் எரிந்து சேதமானது. தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் தலா இரண்டாயிரம் ரூபாய் மற்றும் ஐந்து கிலோ அரிசி, வேட்டி, சேலையை அமைச்சர் செல்வி ராமஜெயம் வழங்கினார்.
மேலும், தனது சொந்த செலவில் பெட்ஷீட், சமையல் பாத்திரங்களையும் வழங்கினார். ஆர்.டி.ஓ., இந்துமதி, தாசில்தார் ராஜேந்திரன், நகர அ.தி.மு.க., செயலர் செல்வக்குமார், இணை செயலர் செஞ்சிலட்சுமி, முன்னாள் சேர்மன் லட்சுமி நாரயணன், தங்க மகாலிங்கம், பேரவை செயலர் இளங்கோவன், சேகர், மாவட்ட மாணவரணி செயலர் உமா மகேஸ்வரன், ஒன்றிய செயலர் சிவப்பிரகாசம், அமைச்சரின் உதவியாளர் வசந்த், ஜெயசீலன் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment