Islamic Widget

March 10, 2011

சிதம்பரம் தொகுதிக்கு காய் நகர்த்தும் பரங்கிப்பேட்டை ஒன்றிய நிர்வாகிகள்

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள அரசியல் கட்சி முக்கிய நிர்வாகிகள் சிதம்பரம் தொகுதியை குறி வைத்து காய் நகர்த்தி வருகின்றனர்.சிதம்பரம் தொகுதியில் பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,விற்கு கணிசமான அளவில் ஓட்டு வங்கி உள்ளது.இதனால் இவ்விரு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளும் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட குறி வைத்து வருகின்றனர்.
கடந்த தேர்தலில் பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் இருந்த 41 ஊராட்சிகள் மற்றும் பரங்கிப்பேட்டை பேரூராட்சி, கிள்ளை பேரூராட்சி ஆகியவை புவனகிரி தொகுதியில் இருந்தது.தொகுதி மறுசீரமைப்பில் தற்போது பரங்கிப்பேட்டை ஒன்றிய பகுதி முழுவதும் சிதம்பரம் தொகுதியில் சேர்ந்துள்ளது. தி.மு.க., கூட்டணியில் சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, கடலூர் ஆகிய தொகுதிகளில் தி.மு.க., போட்டியிட உள்ளதாக பேசப்பட்டு வரும் நிலையில் சிதம்பரம் தொகுதியில் எப்படியும் சீட் பெற்றுவிட வேண்டும் என பரங்கிப்பேட்டை தி.மு.க., முக்கிய நிர்வாகிகள் காய் நகர்த்தி வருகின்றனர்.அதே சமயம் சிதம்பரம் தொகுதியை தற்போது தன் வசம் வைத்துள்ள அ.தி.மு.க., இந்த முறையும் தக்க வைத்து விட வேண்டும் என்ற முடிவுடன் சிட்டிங் எம்.எல்.ஏ., முதல் பரங்கிப்பேட்டை பகுதி அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகளும் சிதம்பரத்தின் மீது கண் வைத்துள்ளனர்.


Source: dinamalar

No comments:

Post a Comment