Islamic Widget

March 10, 2011

பரங்கிப்பேட்டையில் தேர்தல் விதிமுறைகளை பின்பற்ற அரசியல் கட்சிகளுக்கு வேண்டுகோள்

பரங்கிப்பேட்டை: தேர்தல் வதிமுறைகளை பின்பற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில் போலீசார் கேட்டுக் கொண்டனர்.பரங்கிப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் தேர்தல் விதிமுறை குறித்து அனைத்து கட்சிக் கூட்டம் நடந்தது. சப் இன்ஸ்பெக்டர் சீனுவாசன் தலைமை தாங்கினார்.சப் இன்ஸ்பெக்டர் கலாவதி முன்னிலை வகித்தார்.
 அரசியல் கட்சியினர் சார்பில் தி.மு.க., பேரூராட்சி தலைவர் முகமது யூனுஸ், துணைத் தலைவர் செழியன் நகர செயலர் பாண்டியன், அ.தி.மு.க., நகர செயலர் மாரிமுத்து, மலைமோகன், பா.ம.க., முருகன், கவுன்சிலர்கள் அருள்முருகன், நடராஜன், தே.மு.தி.க., செந்தில்குமார், இந்திய கம்யூ., வல்லரசு, மா.கம்யூ., ரஹீம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும், அனுமதியின்றி சுவர் விளம்பரம் எழுதுவதோ, டிஜிட்டல் பேனர் வைக்கவோ கூடாது. அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் மட்டும் பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என கேட்டுகொள்ளப்பட்டது.



Source: dinamalar, photo: mypno

No comments:

Post a Comment