Islamic Widget

March 10, 2011

பரங்கிப்பேட்டை நடுக்கடலில் மோதல்: கடத்தப்பட்ட 8 மீனவர்களும் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை நடுக்கடலில் மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் கடத்தப் பட்ட 8 பேரும் போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டனர். புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் இருந்து நேற்று முன்தினம் நான்குமீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றனர்.
அவர்கள் புதுக்குப்பத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் மீன்பிடித்த போது நாகை மாவட்டம் பழை யாறு மீனவர்களுடன் மோதல் ஏற்பட்டது. இதில் பழையாறு மீனவர்கள் புதுக்குப்பம் மீனவர்களின் வலைகளை அறுத்ததுடன் அவர்கள் 4 பேரையும் கடத்தி சென்று விட்டனர். படகையும் கொண்டு சென்றனர்.அதற்கு பழி வாங்கும் வகையில் புதுக்குப்பம் பகுதியில் மீன்பிடித்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இருவரையும், சீர்காழியை சேர்ந்த இருவரையும் புதுக்குப்பம் மீனவர்கள் பிடித்து சிறை வைத்து படகையும் கொண்டு வந்தனர்.இதனால் 2 மீனவ பகுதி களிலும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று 2 கிராம மக்களிடமும் பரங்கிப்பேட்டை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.அதன்பேரில் புதுப் பேட்டை மீனவர்கள் சிறை பிடித்து வைத்திருந்த 4 பேரையும் பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.அதேபோல் பழையாறு மீனவர்கள் பிடித்து சென்ற புதுக்குப்பம் மீனவர்களை அங்குள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். நேற்று கடத்தப்பட்ட 8 பேரும் கிராம மக்கள் முன்னிலையில் விடு விக்கப்பட்டனர். பின்னர் மீனவர்களின் பிரச்சினை குறித்து சிதம்பரம் கவால் துறை து.கண்காளிப்பாளர் அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தை நடந்தது.இதில் பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், மீன்வளத்துறை ஆய் வாளர் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். பேச்சு வார்த்தையில் அறுந்த மீன் வலைக்கு நஷ்ட ஈடு வழங்குவது, படகுகளை திருப்பி கொடுப்பது என்றும், பிரச்சினை இன்றி மீன்பிடிப்பதாக உறுதி அளித்து சென்றனர். இதையடுத்து இந்த பிரச்சினை சுமூகமாக முடிக்கப்பட்டது.


Source: mypno

No comments:

Post a Comment