Islamic Widget

February 16, 2011

கணவருக்கு வந்த காதலர் தின SMS கண்டு மரணத்தை தழுவிய மனைவி

காதலர் தின வாழ்த்து கணவருக்கு குறுந்தகவலாக வந்ததை அடுத்து மனைவி தீ மூட்டித் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இக்கொடூரம் இலங்கையில் சம்பவித்துள்ளது. இலங்கை ஊடகங்கள் வழியாக இச்செய்தி வெளிவந்துள்ளது.
யாழப்பாணத்தைச் சேர்ந்த ஒரு திருமணமான பெண் கணவருடன் கொழும்பில் வசித்து வந்ததாகவும் கணவர் கொழும்பில் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருவதாகவும் தெரியவருகின்றது.தனது கணவரின் கைத்தொலைபேசிக்கு காதலர் தினத்தன்று வாழ்த்து ஒன்று வந்ததைப் பார்த்த மனைவி, அதற்காக கணவரை விளக்கம் கேட்டு சண்டை பிடித்ததாகவும் அதன் பின்னரே தனக்குத் தானே தீ மூட்டி உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது. இவர்களுக்கு இரு குழந்தைகளும் உள்ளார்கள். இது தொடர்பாக வெள்ளவத்தை காவல் அதிகாரிகள் விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர் என்று சொல்கிற அந்தச் செய்தியில் சம்பந்தப்பட்டோரின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.
இவர்கள் காதல் செய்தே திருமணம் புரிந்தவர் என்கிற அந்தச் செய்தி பெண்களின் மிகுஉரிமையுணர்வு (Possesiveness)க்கு சான்றளிப்பதாக உள்ளது.

No comments:

Post a Comment