கடலூர் மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வடகிழக்கு பருவமழை 2010-ல் முழுமையாக சேதமடைந்த 940 குடிசைகளுக்கும் தலா ரூ.5000/- வீதம் ரூ.47 லட்சமும் பகுதி சேதமடைந்த 11719 குடிசைகளுக்கு தலா ரூ.2500/- வீதம் ரூ.2.93 கோடியும், மழை வெள்ளம் காரணமாக சேதமடைந்த வீடுகளில் இதுவரை 45,343 வீடுகளுக்கு தலா ரூ.1500/- வீதம் ரூ.6.80 கோடியும், சேதமுற்ற 4,440 நெசவாளர் தறி வீடுகளுக்கு தலா ரூ.1500/- வீதம் ரூ.66.60 லட்சமும் ஆக மொத்தம் 62,442 வீடுகளுக்கு ரூ.10.87 கோடி நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளன.
மேலும் மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த 23156,80.00 ஹெக்டேர் பயிர்களுக்கு நிவாரணமாக இதுவரை ரூ.15.66 கோடியும் சேதமடைந்த 2999,26.0 ஹெக்டேர் தோட்டக்கலை பயிர்களுக்கு ரூ.2.25 கோடியும் ஆக ரூ.17.91 கோடி நிவாரணத் தொகை மாவட்டத்திலுள்ள 142 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கப்பட்டு சுமார் 50,000 விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும் பயிர் ஆய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான நிவாரணத் தொகையினை சம்பந்தப் பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளை அணுகி விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள் ளார்
January 19, 2011
கூட்டுறவு வங்கிகளில் வெள்ள நிவாரணத்தை விவசாயிகள் பெறலாம்; கடலூர் கலெக்டர் அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
- உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையில் ரூ2 குறைப்பு- புதிய விலை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது
- மதீனாவில் குளிர்ந்த காற்றுடன் மழை
- ஆசிரியரின் பாலியல் தொந்தரவு பள்ளி மாணவிகள் குமுறல்
- கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் வெள்ளை அடிக்கும் பணி
- ஆசிரியை வீட்டில் புகுந்து ரூ.1.5 லட்சம் நகை திருட்டு!
- வெள்ளாற்றில் கடல்நீர் உட்புகுவதை தடுக்கக் கோரிக்கை
- புனித ரமளான் மதீனா இப்தார் நிகழ்சிகள்
- லஞ்சம் பெற்றுத்தான் அரசு பணிகள் நடக்கின்றன : நரேஷ் குப்தா கவலை!
- பரங்கிப்பேட்டை வாரச்சந்தை ஏலம் கடந்த ஆண்டைவிட இருமடங்கு உயர்வு
- தானே புயல் சென்னையில் கரை கடக்கிறது: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
No comments:
Post a Comment