Islamic Widget

December 18, 2010

பஸ்சில் செயின் திருட்டுபோலீசார் விசாரணை

சிதம்பரம்:சிதம்பரத்தில் அரசு பஸ்சில் சென்ற பெண்ணின் குழந்தை கழுத்தில் இருந்த தங்க செயினை திருடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.சிதம்பரம் அடுத்த முடசல் ஓடை கிராமத்தைச் சேர்ந்தர் மங்கையற்கரசி (30). இவர் நேற்று மதியம் தனது குழந்தையுடன் சிதம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து முடசல் ஓடைக்குச் செல்லும் அரசு பஸ்சில் ஏறினார்.
பஸ் தெற்கு வீதி வரும் போது திடீரென குழந்தையின் கழுத்தில் இருந்த ஒரு சவரன் தங்கச் செயின் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். உடன் சிதம்பரம் நகர போலீஸ் ஸ்டேஷனில் இறங்கி புகார் தெரிவித்தார்.அதன்பேரில் குற்றப்பிரிவு போலீசார் அந்த பெண் வந்த அரசு பஸ்சை விரட்டி சென்று சோதனை செய்தனர். மேலும் சிலரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.


Source:dinamalar

No comments:

Post a Comment