Islamic Widget

December 18, 2010

ஓடும் பேருந்தில் 12 லட்சத்தை கொள்ளை இரண்டு பெண்கள் கைது!

புதுச்சேரி: ஓடும் பேருந்தில் காவல்த்துறை தலைமைக்காவலர் ஒருவரிடமிருந்து ரூ.12 லட்சத்தை இரண்டு பெண்கள் கொள்ளையடித்த சம்பவம் புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுவை காமராஜர் நகரில் வசிப்பவர் ஆட்டோ ஓட்டுனர் குமாரசாமி (வயது 40). இவர் நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு முருகா தியேட்டர் அருகே வாடிக்கையாளருக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு கைக்குழந்தையுடன் வந்த இரண்டு பெண்கள் ஜிப்மர் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமென கூறியதால் அவர்களை மருத்துவமனைக்கு ஆட்டோவில் அழைத்துச் சென்றார்.
மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அப்பெண்களின் நடவடிக்கைகள் ஆட்டோ ஓட்டுனருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதால். மருத்துவமனை எதிரில் ரோந்தில் ஈடுபட்டிருந்த தனவந்தரிநகர் காவலர்களிடம் தகவல் தெரிவித்தார். இரு பெண்களிடமும் காவல்ர்கள் விசாரணை நடத்தினர். அவர்கள் வைத்திருந்த பையில் கட்டு, கட்டாக 12 லட்சம் ரூபாய் பணம் இருந்தது.
இவர்கள் வேலூர் மாவட்டம் காட்பாடி அண்ணாநகரைச் சேர்ந்த ரேகா(23) மற்றும் சூரியா(25) என்பதும் சென்னையில் இருந்து அரசு பஸ்சில் புதுவைக்கு வந்தபோது, அருகில் அமர்ந்திருந்த பயணியிடம் 12 லட்சம் ரூபாயை திருடியதும் விசாரணையில் தெரிய வந்தது.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் கூத்தப்பாக்கத்தைச் சேர்ந்த ஓய்வுப் பெற்ற தலைமைக்காவலர் கலியபெருமாள்(60) என்பவர் தான் பயணம் செய்த பேருந்தில் இருந்த யாரோ தன்னிடம் இருந்து 12 லட்சம் ரூபாய் பணத்தை திருடி விட்டதாக தன்வந்தரி நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து பெண்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து கைப்பற்றிய 12 லட்ச ரூபாய் பணத்தை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
இதை தொடர்ந்து தன்வந்தரி நகர் காவல்நிலையத்தில் நேற்று காலை நடந்த நிகழ்ச்சியில், பணத்தை திருடிய பெண்கள் தொடர்பாக சரியான நேரத்தில் காவல்துறைக்கு உதவிய ஆட்டோ ஓட்டுனர் குமாரசாமிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

 
Source:.inneram

1 comment:

  1. அடி கசங்கொல்வா இப்படிய்ய கொல்ல அடிப்பா

    ReplyDelete