கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில், மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது.
கடலூரில் வெள்ளிக்கிழமை 2-வது நாளாக, 500 பெரிய படகுகள் மற்றும் 5 ஆயிரம் கண்ணாடி இழைப் படகுகள் அனைத்தும், மீன் பிடிக்கச் செல்லவில்லை என்று மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் எம்.சுப்புராயன் தெரிவித்தார்.
வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து உள்ளதால், கடல் கொந்தழிப்பு அதிகமாக இருப்பதாகவும், கடல் நீரோட்டம் மீன்பிடித் தொழிலுக்கு சாதகமாக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இதனால் கடலூர் மாவட்டத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு உள்ள, 30 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.படகுகள் மீன்பிடிக்கச் செல்லாததால் அங்காடிகளில் மீன்வரத்து வெகுவாகக் குறைந்துவிட்டது.
கிலோ ரூ.100 விலையில் விற்பனை செய்யப்பட்ட, சாதாரண ரக மீன்கள் விலை ரூ.120 ஆகவும், வஞ்சரம் போன்ற மீன்களின் விலை ரூ.300 ஆகவும் உயர்ந்துள்ளது. தேவையைப் பூர்த்தி செய்ய, வெளி மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் மீன்கள் வரத்தொடங்கி உள்ளன.
Source:dinamani photos:pno.news
November 27, 2010
கடலூர் மாவட்டத்தில் மீன்பிடித் தொழில் பாதிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
- மதீனாவில் குளிர்ந்த காற்றுடன் மழை
- ஆசிரியரின் பாலியல் தொந்தரவு பள்ளி மாணவிகள் குமுறல்
- கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் வெள்ளை அடிக்கும் பணி
- ஆசிரியை வீட்டில் புகுந்து ரூ.1.5 லட்சம் நகை திருட்டு!
- வெள்ளாற்றில் கடல்நீர் உட்புகுவதை தடுக்கக் கோரிக்கை
- பரங்கிப்பேட்டை வாரச்சந்தை ஏலம் கடந்த ஆண்டைவிட இருமடங்கு உயர்வு
- இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு ...? நம்புவோம்!?
- சவூதி: உணவை வீணடித்தால் அபராதம் – அதிரடி உணவகம்!
- மீண்டும் முற்றுகை மூடப்பட்டது "டாஸ்மாக்
- ஹஜ் செல்பவர்களுக்கு இலவச சிம்
No comments:
Post a Comment