கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில், மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது.
கடலூரில் வெள்ளிக்கிழமை 2-வது நாளாக, 500 பெரிய படகுகள் மற்றும் 5 ஆயிரம் கண்ணாடி இழைப் படகுகள் அனைத்தும், மீன் பிடிக்கச் செல்லவில்லை என்று மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் எம்.சுப்புராயன் தெரிவித்தார்.
வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து உள்ளதால், கடல் கொந்தழிப்பு அதிகமாக இருப்பதாகவும், கடல் நீரோட்டம் மீன்பிடித் தொழிலுக்கு சாதகமாக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இதனால் கடலூர் மாவட்டத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு உள்ள, 30 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.படகுகள் மீன்பிடிக்கச் செல்லாததால் அங்காடிகளில் மீன்வரத்து வெகுவாகக் குறைந்துவிட்டது.
கிலோ ரூ.100 விலையில் விற்பனை செய்யப்பட்ட, சாதாரண ரக மீன்கள் விலை ரூ.120 ஆகவும், வஞ்சரம் போன்ற மீன்களின் விலை ரூ.300 ஆகவும் உயர்ந்துள்ளது. தேவையைப் பூர்த்தி செய்ய, வெளி மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் மீன்கள் வரத்தொடங்கி உள்ளன.
Source:dinamani photos:pno.news
November 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- சி.புதுப்பேட்டை: அறுந்து கிடந்த மின் கம்பியைதொட்ட பெண் உடல் கருகி சாவு!
- ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன் பிரசாரம்
- பரங்கிப்பேட்டை :மீனவ கிராமங்களுக்கிடையே மோதல்
- சிதம்பரம் தொகுதியில் மிரட்டுகிறது பா.ஜ., அரண்டு போயுள்ளது அ.தி.மு.க., - தி.மு.க.,
- அ.தி.மு.க., வுடன் கம்யூ., கூட்டணி ஆச்சர்யமாக உள்ளது: ராமதாஸ்
- கார் டிரைவரை தாக்கிய இரண்டு பேர் கைது
- பரங்கிப்பேட்டை: அரசு மருத்துவமனையில் பழமையான மரம்! ஆபத்து ஏற்படும் முன் அகற்றப்படுமா
- புதிய டாஸ்மாக் கிளையை திறப்பதற்கு முன்பே உடனே இழுத்துமூட கோரிக்கை
- "புகைக்கும்' சென்னை பெண்கள்: எண்ணிக்கையில் அமோக வளர்ச்சி!
- ஹாஜியார் நகா்

No comments:
Post a Comment