தமிழக அரசின் காவல்துறையில் தற்போது கூடுதலாக பத்தாயிரம் பணி இடங்கள் நிரப்ப தேர்வுகள் நடைபெற்றன. அதில் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் விரைவில் பணியில் சேர இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
பத்தாயிரத்துஅறுபது பணி இடங்களில் 1095 காவல்துறை உதவி ஆய்வாளர் களும் காவலர்கள் 8944 பேரும் சிறை காவலர்கள் பணிக்கு 486 பேரும் தீயணைப்பு படை வீரர்கள் பணிக்கு 630 பேரும் பணியில் சேரவிருக்கும் நிலையில் வழக்கம் போல் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு முறையில் துரோகம் இழைக் கப்பட்டதாக தகவல்கள் வெளி வந்ததை யடுத்து சமுதாய ஆர்வலர்கள் கொந்தளிக் கின்றனர்.2069 பணியிடம் ஆதி திராவிட சமூகத்தினருக்கும் 3343 பணியிடங்கள் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கும் பெண்கள் 2673 பேரும்தேர்வு செய்யப்பட்டனர்.
அந்தந்த சமூக மக்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டின்படி அவர்களுக்கு பணி இடங்கள் கிட்டத்தட்ட வழங்கப்பட்டு உள்ளன. உதாரணமாக அருந்ததியர் சமூக மக்களுக்கான பணியிடத்துக்கு 293 பேர் தேர்வாகியுள்ளனர்.
முஸ்லிம் சமூகத்துக்கு வழங்கப்பட்டுள்ள 3.5 சதவீதத்திற்கு வழங்கப்பட்டுள்ள பணியிடங்கள் எவ்வளவு தெரியுமா 263 தான்.
மூன்றரை சதவீதம் இட ஒதுக்கீட்டுக்கு 350 பணியிடங்களுக்கு குறையாமல் அல்லவா இருக்கவேண்டும். கவனக்குறைவால் விளைந்த தவறாக இதனைக் கருதிவிட முடியாது. கணக்கில் பிழை செய்திருக்கிறார்கள். நாளை தேர்தலின் போது முஸ்லிம்கள் சரியான கணக்கு எது என நிரூபித்துக் காட்டுவார்கள்.
தவறை உடனடியாக சரி செய்து தமிழக அரசு அவப்பெயரில் இருந்து தப்புமா? நடவடிக்கை இருக்குமா?
November 25, 2010
இடஒதுக்கீட்டில் திமுக அரசு துரோகம்-? காவல்துறை பணி நியமனத்தில் முஸ்லிம்களுக்கு வஞ்சகம்!
Subscribe to:
Post Comments (Atom)
- திருச்சூர்: கேரளாவில் தமிழக மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- பாபர் மசூதி இடிப்பு தினம் - ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
- ஆன்லனில் இண்டேன், எச்.பி, சமையல் வாயு முன்பதிவு!
- தமிழகத்தில் பயங்கர வெடிப்பொருட்கள் பறிமுதல்! பரபரப்பை ஏற்படுத்தாத ஊடகங்கள்!
- பரங்கிப்பேட்டையில் தீ விபத்து நிவாரண உதவி!
- பசுபதி பாண்டியன் கொலை - தென் மாவட்டங்களில் பதற்றம்: பாதுகாப்பு அதிகரிப்பு
- பரங்கிப்பேட்டை அன்னங்கோயில் முகத்து வாரம் முழுவதும் தூர்ந்து நாள்தோறும் ரூ.50 லட்சம் இழப்பு!
- பரங்கிப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 94-வது ஆண்டு விழா
- புயல் நிவாரணம்: விண்ணப்பிக்க புகார் மையம்
- சிதம்பரம் சாலையில் பஸ்-லாரி மோதல்: 12 பேர் காயம்
No comments:
Post a Comment