பரங்கிப்பேட்டை நவ.1: பரங்கிப்பேட்டையில் இன்று (1ந் தேதி) முதல் 2 மணி நேர மின்சார நிறுத்த நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக செயற்பொறியாளர் செல்வ சேகர் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் மின்வாரிய செயற்பொறியாளர் செல்வசேகர் விடுத்துள்ள செய்தி குறிப்பு:
சிதம்பரத்தில் தினமும் 2 மணி நேரம் மின் நிறுத்தம் செய்யும் நேரம் இன்று (1ந் தேதி) முதல் மாற்றியமைக்கப்படுகிறது. சிதம்பரம் துணைமின் நிலையத்திலிருந்து மின் சப்ளை பெறும் நடராஜா பீடர் பகுதிகளான மேலவீதி, வடக்குவீதி, 16கால் மண்டபத் தெரு, கமலீஸ்வரன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் காலை 6.00 மணி முதல் 8.00 மணி வரையிலும், டூரிஸம் பீடர் மூலம் மின் சப்ளை பெறும் ரயில்வே பீடர் ரோடு, பஸ் நிலையம், எஸ்.பி.கோயில் தெரு, சபாநாயகர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் காலை 10.00 முதல் 12.00 மணி வரையிலும், அண்ணாமலைநகர், மாரியப்பாநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மதியம் 2.00 மணி முதல் 4.00 மணி வரையிலும், அம்மாபேட்டை, மணலூர், வண்டிகேட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரையிலும்,
காட்டுமன்னார்கோயில் துணை மின் நிலையத்திலிருந்து மின் சப்ளை பெறும் காட்டுமன்னார்கோயில், லால்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 6.00 மணி முதல் 8.00 மணி வரையிலும்,
பு.முட்லூர் துணை மின் நிலையத்திலிருந்து மின் சப்ளை பெறும் புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மதியம் 12.00 மணிமுதல் 2.00 மணிவரையிலும், ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாதோப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மதியம் 12.00 மணி முதல் 2.00 மணிவரையிலும் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.
Source: Dinakaran
November 01, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- ஈரான்:மொசாத் ஏஜண்டிற்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டது!!!
- வாகன நம்பர் பலகையில் இஷ்டத்துக்கு எழுதுபவரா நீங்கள்:போலீஸ் பிடிக்கும் ஜாக்கிரதை
- மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி! குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!!
- புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் ஆபாச நடனம் கூடாது
- மீராப்பள்ளி நோன்பு பெருநாள் தொழுகை (படங்கள்)
- கடலூா் சிப்காடினால் பாதிப்பு சில வீடியோ காட்சி
- K-Tic ஏற்பாடு செய்த 'கல்வி விழிப்புணர்வு முகாம் & கருத்து பரிமாற்ற நிகழ்வுகள்' / K-Tic Conducted 'Educational Awareness Camp & Exchanges of Thoughts
- புதிய பள்ளிவாசல் வாத்தியாப்பள்ளி
- ஹஜ் பயணத்திற்கான ஒப்பந்தம்:மத்திய உயர்மட்டக்குழு நாளை முடிவு செய்கிறது
இன்று காலையிலேயே மின்சாரம் நிறுத்தப்பட்டது ஏன்?
ReplyDeleteநீங்கள் சிதம்பரம் மின்வாரியதை தான் கேக்கவேண்டும்
ReplyDelete