வடகிழக்கு பருவக் காற்றால் கடலூர் மாவட்டத்தின் வறண்ட பகுதிகளான திட்டக்குடி, விருத்தாசலம் தாலுகாக்களில் கனமழை பெய்துள்ளது. பரங்கிப்பேட்டையில் 12 மில்லி மீட்டர் மழை பெய்தது.
மழையளவு:
திங்கள்கிழமை காலை 8-30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், திட்டக்குடி, விருத்தாசலம் தாலுகாக்களில் உள்ள லக்கூரில் 17.6 செ.மீ., விருத்தாசலத்தில் 17.3 செ.மீ., தொழுதூரில் 11.5 செ.மீ., குப்பநத்தத்தில் 10.8 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது.
மற்ற பகுதிகளில் பதிவாகி உள்ள மழையின் அளவு மி.மீட்டரில் வருமாறு:
பெலாந்துரை 74மேமாத்தூர் 68கொத்தவாச்சேரி 67வேப்பூர் 62காட்டுமயிலூர் 56காட்டுமன்னார்கோயில் 54லால்பேட்டை 53புவனகிரி 42கீழ்ச்செறுவாய் 41கடலூர் 39பண்ருட்டி 30ஸ்ரீமுஷ்ணம் 30சேத்தியாத்தோப்பு 28வானமாதேவி 27சிதம்பரம் 21அண்ணாமலை நகர் 12பரங்கிப்பேட்டை 12மாவட்டத்தில் சராசரியாக 61 மி.மீ. மழை பெய்துள்ளது.
மாவட்டத்தின் பல பகுதிகளில் பருவமழை பெய்து வருகிறது. இதனால் பிரதான ஏரிகளும் நிரம்பி வருகின்றன. வெலிங்டன் ஏரி நீர்மட்டம் திங்கள்கிழமை 11.5 அடியாக இருந்தது (மொத்த உயரம் 32 அடி). மற்ற ஏரிகளில் நீர்மட்டம் (மொத்த கொள்ளளவு அடைப்புக் குறிக்குள்): பெருமாள் ஏரி 5.2 அடி (6 அடி). வாலாஜா 5 அடி (5.5 அடி).
10-ல் ஆலோசனைக் கூட்டம்:
மழை திருப்திகரமாக இருப்பதையொட்டி, வெள்ளாறு வடிநிலக் கோட்டத்தில் உள்ள வெலிங்டன் ஏரி, கோமுகி அணை, மணிமுத்தாறு அணை ஆகியவற்றின் நீர்ப்பாசனப் பிரச்னைகள் குறித்த, நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தினர் மற்றும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம், விருத்தாசலத்தில் 10-ம் தேதி நடைபெற இருப்பதாக வெலிங்டன் ஏரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பெண்ணாடம் சோமசுந்தரம் தெரிவித்தார்.
Source: Dinamani. photos: pno.news
November 02, 2010
கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை; பரங்கிப்பேட்டையில் 12 மில்லி மீட்டர் மழை பெய்தது
Labels:
பரங்கிப்பேட்டை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 6 ஆண்டுகள் வரை சிறை. மத்திய அரசின் புதிய சட்டம்.
- துரோகமே செய்தாலும் காங்கிரஸை நான் மறவேன்....''-ததஜ!!!
- பரங்கிப்பேட்டை : நீர் உயிர் நச்சு கருத்தரங்கம்
- பரங்கிப்பேட்டையில் வத்தக்கரை எரிந்து சாம்பல்லனாது
- கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் போட்டியிடுவதைத் தடை செய்ய வேண்டும்: குரேஷி!
- கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் வெள்ளை அடிக்கும் பணி
- எனது மீட்சிக்காக எல்லாம் வல்ல ஆண்டவனை மனம் உருகிப் பிரார்த்தியுங்கள்! சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் ரிஸானா இறைஞ்சல்
- தொழிற்சாலையில் தீ : இந்தியர் உட்பட 11 பேர் பலி
- 11-வது வார்டு உறுப்பினர் இபாயின் வெற்றி!
- விஜய் ஆதரவு அதிமுகவுக்கு

No comments:
Post a Comment