புதுடெல்லி: பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் நிதின் கட்காரி பதவி ஏற்று ஒரு ஆண்டு முடிந்து விட்டது. இந்நிலையில் நிதின் கட்காரி மீதும் அவரது செயல்பாடுகள் மீதும் இந்துத்வா அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
இதனால் பாரதீய ஜனதா கட்சியை வலுப்படுத்த சரியான தலைவர் தேவை என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கருதுகிறது. பாரதீய ஜனதா கட்சியில் தற்போது குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி செல்வாக்கு பெற்றவராக இருக்கிறார். மேலும் மக்கள் மத்தியிலும் அவருக்கு ஆதரவு உள்ளதாக சொல்லப்படுகிறது
இந்நிலையில் குஜராத்தில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் பா.ஜனதா வெற்றி பெற்றது. இதற்கு நரேந்திர மோடியின் செயல்பாடுதான் காரணம் என்று ஆர்.எஸ்.எஸ். கருதுகிறது. இதனால் மோடிதான் பாரதீய ஜனதாவின் தலைவராக வேண்டும் என்று அந்த அமைப்பு விருப்பம் தெரிவித்து உள்ளது. இதனால் அவரையே தலைவராக்குவதற்கான முயற்சியிலும் அந்த இயக்கம் ஈடுபட்டுள்ளது.
பாரதீய ஜனதா இழந்த செல்வாக்கை மீண்டும் பெற பொருத்தமானவர் மோடிதான் என்று அந்த அமைப்பு கருதுவதால் . 2014-ம் ஆண்டு பாரதீய ஜனதாவின் கட்சித் தலைவருக்கான பொதுத் தேர்தல் நடக்கிறது. அப்போது பாரதீய ஜனதாவின் அடுத்த தலைவராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
Source: inneram.com
November 01, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- அதிமுக வேட்பாளருக்கு ஓட்டு கேட்ட வடிவேலு : திமுகவினர் ஆவேசம் !
- சென்னையில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிப்பு
- போலீஸ் பணிக்கு எழுத்துத் தேர்வுகடலூரில் நாளை நடக்கிறது
- இறப்புச் செய்தி
- ரியாத் விமான நிலையத்தில் சரக்கு விமானம் தரையிறங்கும் போது விபத்து
- விஜயகாந்த் குடிகாரர் அல்ல! - வடிவேலுவுக்கு நடிகர் மன்சூர் அலிகான் அறிவுரை
- பரங்கிப்பேட்டை ஜசிஜசிஜ வங்கியில் பரபரப்பு !
- பரங்கிப்பேட்டையில் வாலிபால் போட்டி!
- நன்பன் நூா் அலி தி௫மணம்
- பரங்கிப்பேட்டையில் ஈகைத்திருநாள் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி

No comments:
Post a Comment