புதுடெல்லி: பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் நிதின் கட்காரி பதவி ஏற்று ஒரு ஆண்டு முடிந்து விட்டது. இந்நிலையில் நிதின் கட்காரி மீதும் அவரது செயல்பாடுகள் மீதும் இந்துத்வா அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
இதனால் பாரதீய ஜனதா கட்சியை வலுப்படுத்த சரியான தலைவர் தேவை என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கருதுகிறது. பாரதீய ஜனதா கட்சியில் தற்போது குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி செல்வாக்கு பெற்றவராக இருக்கிறார். மேலும் மக்கள் மத்தியிலும் அவருக்கு ஆதரவு உள்ளதாக சொல்லப்படுகிறது
இந்நிலையில் குஜராத்தில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் பா.ஜனதா வெற்றி பெற்றது. இதற்கு நரேந்திர மோடியின் செயல்பாடுதான் காரணம் என்று ஆர்.எஸ்.எஸ். கருதுகிறது. இதனால் மோடிதான் பாரதீய ஜனதாவின் தலைவராக வேண்டும் என்று அந்த அமைப்பு விருப்பம் தெரிவித்து உள்ளது. இதனால் அவரையே தலைவராக்குவதற்கான முயற்சியிலும் அந்த இயக்கம் ஈடுபட்டுள்ளது.
பாரதீய ஜனதா இழந்த செல்வாக்கை மீண்டும் பெற பொருத்தமானவர் மோடிதான் என்று அந்த அமைப்பு கருதுவதால் . 2014-ம் ஆண்டு பாரதீய ஜனதாவின் கட்சித் தலைவருக்கான பொதுத் தேர்தல் நடக்கிறது. அப்போது பாரதீய ஜனதாவின் அடுத்த தலைவராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
Source: inneram.com
Subscribe to:
Post Comments (Atom)
- இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு ...? நம்புவோம்!?
- சவூதி: உணவை வீணடித்தால் அபராதம் – அதிரடி உணவகம்!
- மீண்டும் முற்றுகை மூடப்பட்டது "டாஸ்மாக்
- திண்ணை குழுமத்தின் சார்பாக விழிப்புனர்வு
- பரங்கிப்பேட்டையில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க புதையல் திட்ட கிளை அலுவலகம் தலைவா் முகமது யூனுஸ் திறந்து வைத்தார்.
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 6 ஆண்டுகள் வரை சிறை. மத்திய அரசின் புதிய சட்டம்.
- மருத்துவ மாணவிக்கு செல்போனில் செக்ஸ் தொந்தரவு
- இண்டெர்நெட் வாய்ப் கால்:அடுத்த ஆண்டு முதல் துவங்கும் - எடிசலாத்
- துக்க நிகழ்ச்சியில் தகராறு இருவர் மீது தாக்குதல்
- தமிழகத்தில் 'பாரத் பந்த்' பிசுபிசுத்தது!
No comments:
Post a Comment