கிள்ளை : கடலூர் - பிச்சாவரம் செல்லும் அரசு பஸ்சை கூடுதல் "டிரிப்' இயக்க அப்பகுதியினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள் ளனர்.கடந்த இரு நாட்களுக்கு முன்பு பரங்கிப் பேட்டையில் நடந்த அரசு விழாவில் கடலூரில் இருந்து பரங்கிப் பேட்டை வழியாக பிச்சாவரத்திற்கு அரசு பஸ்சை அமைச்சர் பன்னீர்செல் வம் இயக்கி வைத்தார்.தற்போது கடலூரில் இருந்து பிச்சாவரத்திற்கு காலை 11.10, மதியம் 2.40, மாலை 6 மணிக்கும் வந்து செல்கிறது. இதனால் சுற்றுப் பகுதியில் உள்ளவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஆனால் காலையில் முடசல்ஓடை மீன் மார்க் கெட்டிற்கு வரும் வியாபாரிகள் சிதம்பரம் வழியாக கடலூருக்கு சுற்றிச் செல்கின்றனர். அத்துடன் பிச்சாவரம், கிள்ளை, பொன்னந்திட்டு பகுதியில் இருந்து கடலூரில் உள்ள கல்லூரிக்குச் செல் லும் மாணவர்களும் சிதம் பரம் வழியாக சுற்றிச் செல்கின்றனர். மீன் வியாபாரிகள் மற்றும் மாணவர்கள் பயன் பெறும் வகையில் காலை 9 மணிக்கு பிச்சாவரத்தில் இருந்து புறப்படும் வகையில் கூடுதலாக ஒரு "டிரிப்' இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்தவர் கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
source: dinamalar
October 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- கள்ளக்காதலை கண்டித்த கணவரை முகத்தில் துணி வைத்து அழுத்தி கொலை
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- கடலூர் அருகே ரூ.82 லட்சம் செலவில் சாலை சீரமைப்பு பணி; அய்யப்பன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- கிளைநூலக கட்டிடத்தை மாற்றகோரி கைருன்னிசா மனு
- வரும் 7ம் தேதி தனியார் பஸ்கள் ஓடாது : போக்குவரத்து தொழிலாளர் சங்கம் அறிவிப்பு
- ஈரான்:மொசாத் ஏஜண்டிற்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டது!!!
- கடலூா் சிப்காடினால் பாதிப்பு சில வீடியோ காட்சி
- வாத்தியாப்பள்ளி தெரு சாலை...!
- கடலூர் அருகே பலத்த மழை: இடிதாக்கி செங்கல் சூளை தொழிலாளி பலி
- இணையதள வடிவமைப்பாளர் தேவை!
No comments:
Post a Comment