வாஷிங்டன்: காஷ்மீரில் கலவரத்தை உண்டு பண்ணவும், காஷ்மீர் விடுதலைக்காவும் பாகிஸ்தானில் தீவிரவாதிகளை உருவாக்கி, வளர்த்தி, பயிற்சி யளித்து அனுப்பி வைத்தோம் என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் சர்வாதிகாரி பர்வேஸ் முஷாரப்.
இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதிகளை உருவாக்கி, பயிற்சி அளித்து அனுப்பினோம் என்று முதல் முறையாக ஒரு பாகி்ஸதான் தலைவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து முஷாரப் ஜெர்மனி பத்திரிக்கை டெர் ஸ்பீகலுக்கு அளித்துள்ள பேட்டியில் இதைத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,
காஷ்மீரில் நடந்து வரும் உரிமைப் போராட்டத்துக்கு ஆதரவாகவும், அங்குள்ள மக்களுக்கு உதவியாகவும் ரகசியமாக போராளிகளை உருவாக்கி, பயிற்சி அளித்து அனுப்பி வத்தோம். அங்கு போராடி வரும் பெரும்பாலானோர் இங்கு (பாகிஸ்தானில்) பயிற்சி பெற்றவர்கள்தான்.
காஷ்மீர் விவகாரத்தில் நவாஸ்ஷெரீப் முதுகெலும்பு இல்லாதவராக இருந்தார். இதனால்தான் நாங்கள் (அப்போது ராணுவத் தலைமைத் தளபதியாக இருந்தார் முஷாரப்) ரகசியமாக போராளிகளை உருவாக்கி அனுப்பி வைக்க நேரிட்டது. மேலும், காஷ்மீர்ப் பிரச்சினை குறித்து உலகமும் கண்களை மூடியபடி இருந்ததால் நாங்களே அதில் தலையிட நேர்ந்தது.
தனது சக இனத்தவர்கள் உரிமைக்காக போராடி வரும்போது அதே இனத்தைச் சேர்ந்தவர்கள், உதவுவது உலக இயல்புதானே என்று கூறியுள்ளார் முஷாரப்.
தற்போது இங்கிலாந்தில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வருகிறார் முஷாரப். சமீபத்தில்தான் அனைத்து பாகிஸ்தான் மக்கள் கட்சி என்ற புதிய கட்சியையும் தொடங்கினார் என்பது நினைவிருக்கலாம்.
Source: thatstamil
October 06, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- புதுப்பள்ளி
- நஷ்டவாளர்கள் யார்?
- வாரணாசி குண்டு வெடிப்பு - 2 வயது குழந்தை பலி!
- பாபர் மசூதி இடிப்பு தினம் - ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
- சென்னை விமான நிலையத்தில் மலேசியா செல்ல முயன்ற 14 வாலிபர்கள் தடுத்து நிறுத்தம்; சுற்றுலா விசாவில் ஓட்டல் வேலைக்கு சென்றது கண்டுபிடிப்பு
- ஜூன் 4-ல் பஸ் நிறுத்த போராட்டம்: போக்குவரத்து தொழிலாளர் சங்கம் தீர்மானம்
- ஒரு கிலோ பூண்டின் விலை ரூ. 300!
- ஏழைகளுக்கு இலவச கேஸ் இணைப்பு : அக்.2ல் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்
- வாரணாசி குண்டு வெடிப்புக்கு தமுமுக கடும் கண்டனம் - உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்
- பரங்கிப்பேட்டையில் ஜெயலலிதா மீதான வழக்கு 42-வது முறையாக ஜூன் 13 க்கு ஒத்திவைக்கப்பட்டது.

No comments:
Post a Comment