லண்டன் : லண்டன் ஓட்டலில் தங்கியிருந்த சவுதி இளவரசர், தனது உதவியாளரை கடுமையாக தாக்கியது, அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்துக்கு பிறகு அந்த உதவியாளர் இறந்துவிட்டார். சவுதி அரேபிய மன்னரின் சகோதரரின் பேரன் அப்துல் அஜிஸ் பின் நாசர்(34). இவர் கடந்த பிப்ரவரி மாதம், லண்டனில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தார். இவருடைய உதவியாளரும் இவரது அறையில் தங்கியிருந்தார். ஆனால், பிப்ரவரி 15ம்தேதி உதவியாளர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். உதவியாளரின் கன்னத்தில் காயம் இருந்தது. எனவே, இந்த கொலை பாலியல் தொடர்பானதாக இருக்கலாம்,
என போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலை நடந்தது தொடர்பாக தனக்கு ஏதும் தெரியாது, என முதலில் மறுத்திருந்தார் அப்துல் அஜிஸ். ஓட்டல் படிகட்டில் தனது உதவியாளரை சவுதி இளவரசர் கடுமையாக தாக்கியது அங்குள்ள கேமராவில் பதிவாகியுள்ளது. உதவியாளரை தாக்கியதை ஒப்புக்கொண்ட இளவரசர் இந்த கொலையை செய்யவில்லை, என மறுப்பு தெரிவித்துள்ளார்.
Source: Dinamalar
October 06, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- புதுப்பள்ளி
- நஷ்டவாளர்கள் யார்?
- வாரணாசி குண்டு வெடிப்பு - 2 வயது குழந்தை பலி!
- பாபர் மசூதி இடிப்பு தினம் - ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
- சென்னை விமான நிலையத்தில் மலேசியா செல்ல முயன்ற 14 வாலிபர்கள் தடுத்து நிறுத்தம்; சுற்றுலா விசாவில் ஓட்டல் வேலைக்கு சென்றது கண்டுபிடிப்பு
- ஜூன் 4-ல் பஸ் நிறுத்த போராட்டம்: போக்குவரத்து தொழிலாளர் சங்கம் தீர்மானம்
- ஒரு கிலோ பூண்டின் விலை ரூ. 300!
- ஏழைகளுக்கு இலவச கேஸ் இணைப்பு : அக்.2ல் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்
- வாரணாசி குண்டு வெடிப்புக்கு தமுமுக கடும் கண்டனம் - உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்
- பரங்கிப்பேட்டையில் ஜெயலலிதா மீதான வழக்கு 42-வது முறையாக ஜூன் 13 க்கு ஒத்திவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment