சிதம்பரம் : கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா நாளை சிதம்பரம் வருகை தர உள்ளதையொட்டி நேற்று ஹெலிகாப்டர் ஒத்திகை நடந்தது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்லைக்கழகத்தில் 78வது பட்டமளிப்பு விழா நாளை (6ம் தேதி) நடக்கிறது. தமிழக கவர்னரும், பல்கலைக்கழக வேந்தருமான சுர்ஜித்சிங் பர்னாலா பங்கேற்று மாணவ, மாணவியர்களுக்கு பட்டம் மற்றும் அறக்கட்டளை விருதுகளை வழங்குகிறார். கவர்னர், ஹெலிகாப்டர் மூலம் சிதம்பரம் வருவதையொட்டி நேற்று ஹெலிகாப்டர் ஒத்திகை நடந்தது.
சென்னையில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர், சிதம்பரம் விவசாய கல்லூரி ஹெலிபேடில் தரையிறங்கியது. ஹெலிகாப்டரில் வந்த கவர்னரின் பாதுகாப்பு அதிகாரிகள் பல்கலைக்கழக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். பின், ஹெலிபேடில் இருந்து பட்டமளிப்பு விழா அரங்கிற்கு கவர்னர் செல்லும் வழியை கார் மூலம் சென்று ஆய்வு செய்தனர்.
Source: Dinamalar
October 05, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 6 ஆண்டுகள் வரை சிறை. மத்திய அரசின் புதிய சட்டம்.
- துரோகமே செய்தாலும் காங்கிரஸை நான் மறவேன்....''-ததஜ!!!
- பரங்கிப்பேட்டை : நீர் உயிர் நச்சு கருத்தரங்கம்
- பரங்கிப்பேட்டையில் வத்தக்கரை எரிந்து சாம்பல்லனாது
- கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் போட்டியிடுவதைத் தடை செய்ய வேண்டும்: குரேஷி!
- கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் வெள்ளை அடிக்கும் பணி
- எனது மீட்சிக்காக எல்லாம் வல்ல ஆண்டவனை மனம் உருகிப் பிரார்த்தியுங்கள்! சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் ரிஸானா இறைஞ்சல்
- 11-வது வார்டு உறுப்பினர் இபாயின் வெற்றி!
- விஜய் ஆதரவு அதிமுகவுக்கு
- நோன்பு கஞ்சி செய்முறை
No comments:
Post a Comment