கடலூர் : கடலூர் மாவட்டத்தில் நாளை (இன்று) கடைகள் வழக்கம் போல் திறந்திருக்கும். பஸ், ஆட்டோக் கள் ஓடும் என கலெக்டர் சீத்தாராமன் கூறினர். அவர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முதல்வர் மத்திய அரசை வலியுறுத்தியும், கடிதம் எழுதியும் உள்ளார். சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கிலும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண கோர்ட் அறிவுறுத்தியுள்ளது. அதற்கான பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து உதவி தொழிலாளர் கமிஷனர் நாள் குறித்து அனைத்து தொழிற் சங்கங்களையும் அழைத் துப் பேசும் இணக்கமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.
என்.எல்.சி.,க்கு வேலைக்கு செல்பவர் களை தடுப்பது, போக்குவரத்தை தடை செய்வது, நிறுவனத்திற்கு வரும் பொருட்களை தடை செய் வது, சுரங்கப் பணிகளை தடை செய்வது கூடாது. இது தொழிற்சாலையுடைய பிரச்னை. இதனால் மாவட்ட மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது சரியானதல்ல. கடையடைப்பு நடத்துவதால் பண் டிகை நாட்களில் பொது மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் பாதிப்பு ஏற்படும்.
எனவே இந்த போராட் டத்தை தவிர்க்க வேண்டுகிறேன். பஸ்கள் நாளை (இன்று) வழக்கம் போல் ஓடும். கடைகள் திறந்திருக்கும். கடைகளை மூடுமாறு கூறினாலோ, பொது சொத்துக்களை சேதப்படுத் தினாலோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும். இவற்றை கண்காணிப்பதற்காக 19 தாசில் தார்கள் வாகனங்களில் ரோந்து வருவர். நாளை அலுவலகங்களில் விடுமுறை எடுப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் சீத்தாராமன் கூறினார். டி.ஆர்.ஓ., நடராஜன் உடனிருந்தார்.
2,800 போலீசார் பாதுகாப்பு: எஸ்.பி., தகவல் : எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் கூறியதாவது: கடலூர் மாவட்டத்தில் கடைகளை திறக்கவும், பஸ்களை இயக்கவும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக மாவட் டத்தை ஆறு பகுதிகளாக பிரித்து ஒவ்வொரு சப் டிவிஷனிலும் ஒரு எஸ்.பி., தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம், தஞ்சாவூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்ட எஸ்.பி., க்கள் தலைமை தாங்கி பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். மேலும் 10 ஏ.டி.எஸ்.பி.,க்கள், 15 டி.எஸ்.பி.,க்கள், 300 எஸ்.ஐ., எஸ்.எஸ்.ஐ., ஆயுதப்படை போலீசார் 2000 பேர் உட்பட 2800 போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பர். வடக்கு மண்டல ஐ.ஜி., ரமேஷ் குடவாலா வருகை தர உள்ளார். எனவே, வணிகர்கள் பயப்பட வேண்டாம். பஸ், ஆட்டோக்கள் வழக்கம் போல் இயக்கப்படும். ஏதாவது அசம்பாவிதம் நடப்பதாக அறிந் தால் உடனே போலீசாருக்கு தகவல் தரலாம். இவ்வாறு எஸ்.பி., கூறினார்.
Source: Dinamalar
October 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- ஜெத்தா தமிழ் சங்கத்தின் வாழ்க நலமுடன் நிகழ்ச்சி!
- நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் – புதிய நிர்வாகிகள்
- குவைத்தில் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு நிகழ்ச்சிகள்
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
- கிருஷ்ணகிரி:குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் பலி: மேலும் குண்டுகள் பறிமுதல்
- இறப்புச்செய்தி
- பரங்கிப்பேட்டை பழைய ரயில்வே கருடரை அகற்றாததால் புதிய பாலத்திற்கு ஆபத்து
- நஷ்டவாளர்கள் யார்?
No comments:
Post a Comment