கடலூர், ஜூலை 20: போலீஸôர் கைப்பற்றிய நாட்டு வெடிகுண்டுகள் செவ்வாய்க்கிழமை செயல் இழக்கச் செய்யப்பட்டன.
÷கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்பு உள்ளவர் மேலக்குப்பம் சங்கர் (32). இவரை அண்மையில் போலீஸôர் மடக்கிப் பிடித்தனர். தப்பியோட முயன்றபோது அவரது வலது கால் முறிந்ததாகப் போலீஸôர் தெரிவித்தனர். தற்போது அவர் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
÷கைதானபோது அவரிடம் இருந்து 3 டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருந்த அந்த வெடிகுண்டுகளை செயல் இழக்கச்செய்ய, நீதிமன்றத்தில் அனுமதி கோரி இருந்தனர். நீதிமன்ற அனுமதியுடன் வெடிகுண்டுகளை போலீஸôர் செவ்வாய்க்கிழமை செயல் இழக்கச் செய்தனர்.
÷ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பெண்ணை ஆற்றில் பள்ளம் தோண்டி அவற்றை வெடிக்கச் செய்தனர். வெடிகுண்டுகள் பயங்கர சப்தத்துடன் வெடித்ததை வெகுதூரம் வரை கேட்க முடிந்தது.
÷இதனால் அந்தப் பகுதி, புகை மண்டலமாகக் காட்சி அளித்தது. வெடிகுண்டுகளின் திறன் குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்று போலீஸôர் தெரிவித்தனர்.
மாவட்ட செய்திகள
Source: dinamani
Subscribe to:
Post Comments (Atom)
- ஜெத்தா தமிழ் சங்கத்தின் வாழ்க நலமுடன் நிகழ்ச்சி!
- நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் – புதிய நிர்வாகிகள்
- விமானத்தின் எமர்ஜென்சி எக்சிட் வழியாக குதித்த பயணி: சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு
- குவைத்தில் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு நிகழ்ச்சிகள்
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
- கிருஷ்ணகிரி:குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் பலி: மேலும் குண்டுகள் பறிமுதல்
- இறப்புச்செய்தி
- நஷ்டவாளர்கள் யார்?
No comments:
Post a Comment