July 26, 2010
சென்னையில் சவுதி விமான இன்ஜினில் தீ : 180 பயணிகளுடன் அவசரமாக தரையிறக்கம்
இன்று மதியம் 12.15 மணி அளவில் சென்னையில் இருந்து ஜெட்டா நோக்கி புறப்பட்ட சவுதி ஏர்வேஸ் விமானம் பெரும் விபத்தில் இருந்து தப்பியது. இந்த விபத்து தவிர்க்கப்பட்டதால் 180 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சவுதி ஏர்வேஸ் எஸ்.வி., 769 விமானம் வழக்கம்போல் புறப்படும் போது இன்ஜின் பகுதியில் இருந்து புகை வந்தது. இந்த தகவல் பைலட்டுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக பைலட் சாதுர்யமாக விமானத்தை எடுத்து செல்லாமல் மீண்டும் தரையில் இறங்கினார். பயணிகள் அவசர. அவசரமாக இறக்கப்பட்டனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.மீட்பு மற்றும் தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். விமானம் சோதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு தொழில் நுட்ப கோளாறு தான் காரணமாக இருக்கும் என முதலில் வந்துள்ள செய்தி தெரிவிக்கிறது என்று தினமலர் இணையத்தளத்தில் சற்று முன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
- ஜெத்தா தமிழ் சங்கத்தின் வாழ்க நலமுடன் நிகழ்ச்சி!
- நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் – புதிய நிர்வாகிகள்
- குவைத்தில் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு நிகழ்ச்சிகள்
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
- கிருஷ்ணகிரி:குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் பலி: மேலும் குண்டுகள் பறிமுதல்
- இறப்புச்செய்தி
- பரங்கிப்பேட்டை பழைய ரயில்வே கருடரை அகற்றாததால் புதிய பாலத்திற்கு ஆபத்து
- நஷ்டவாளர்கள் யார்?
No comments:
Post a Comment