July 26, 2010
சென்னையில் சவுதி விமான இன்ஜினில் தீ : 180 பயணிகளுடன் அவசரமாக தரையிறக்கம்
இன்று மதியம் 12.15 மணி அளவில் சென்னையில் இருந்து ஜெட்டா நோக்கி புறப்பட்ட சவுதி ஏர்வேஸ் விமானம் பெரும் விபத்தில் இருந்து தப்பியது. இந்த விபத்து தவிர்க்கப்பட்டதால் 180 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சவுதி ஏர்வேஸ் எஸ்.வி., 769 விமானம் வழக்கம்போல் புறப்படும் போது இன்ஜின் பகுதியில் இருந்து புகை வந்தது. இந்த தகவல் பைலட்டுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக பைலட் சாதுர்யமாக விமானத்தை எடுத்து செல்லாமல் மீண்டும் தரையில் இறங்கினார். பயணிகள் அவசர. அவசரமாக இறக்கப்பட்டனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.மீட்பு மற்றும் தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். விமானம் சோதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு தொழில் நுட்ப கோளாறு தான் காரணமாக இருக்கும் என முதலில் வந்துள்ள செய்தி தெரிவிக்கிறது என்று தினமலர் இணையத்தளத்தில் சற்று முன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
- மதீனாவின் சிறப்பு
- இந்தியாவின் முதல் முஸ்லிம் தலைமைத் தேர்தல் கமிஷனராக எஸ்.ஒய்.குரேஷி இன்று பொறுப்பேற்கிறார்.
- பரங்கிபேட்டையில் பரபரபு பள்ளி மாணவர்களுக்கிடையே தகராறு போலிஸ் நிலையம்முற்றுகை!
- தனியே பிரிந்தது ரயில் இன்ஜின்; பெரிய விபத்து தவிர்ப்பு
- சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தேர்தல்களம்
- வெப் கேமரா புகைப்படம், கைரேகைகள் மூலம் பத்திரப் பதிவு
- வடிவேலு அடி வாங்குற நேரம் நெருங்கிடுச்சி : விந்தியா
- காஸ் சிலிண்டர்கள் எடை குறைவு:நிறுவனங்கள் மீது நடவடிக்கை
- விமானத்தின் கருப்புப் பெட்டியை கண்டுபிடித்தவர் காலமானார்
- தினம் ஒரு குர்ஆன் வசனம்
No comments:
Post a Comment