Islamic Widget

November 18, 2011

கல்லூரி பேருந்து, அரசு பேருந்து மீது மோதி விபத்து!


மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கரிசல்பட்டி விலக்கு என்ற இடத்தில் நேற்று காலை ஒரு அரசு பேருந்து பயணிகளை இறக்கி விட்டுக் கொண்டிருந்தது. அப்போது கள்ளிக்குடியில் உள்ள காமராஜர்  பொறியியல் கல்லூரிக்குச் சொந்தமான பேருந்து மாணவ-மாணவிகளை ஏற்றிக் கொண்டு கள்ளிக்குடி நோக்கி வந்து கொண்டிருந்தது.


இந்த நிலையில், திடீரென கல்லூரி பேருந்து அரசு பேருந்தின் பின் பக்கத்தில் மோதியது. இதில் கல்லூரி பேருந்தின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது. மேலும் கல்லூரி பேருந்தில் இருந்த முத்துலட்சுமி, பிரீத்தி,திவ்யா, சித்ரா உள்பட 18 மாணவ-மாணவிகளும், அரசு பேருந்தில் இருந்த நடத்துனர் சிவக்குமார், பயணிகள் மூர்த்தி, குருசாமி ஆகியோரும் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்சு மூலம் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.  


இதுகுறித்து தகவல் அறிந்த திருமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம்,தாசில்தார் மோகன் ஆகியோர்காயமடைந்தவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறினர். இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த 4 பேர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.


விபத்து குறித்து திருமங்கலம் டவுன் காவல்துறையினர்வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


No comments:

Post a Comment