Islamic Widget

November 18, 2011

பரங்கிப்பேட்டை: வீச்சரிவாளை காட்டி 15 சவரன் நகை வழிப்பறி!


பரங்கிப்பேட்டை:கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை வழிமறித்து வீச்சரிவாளை காட்டி 15 சவரன் நகை, வைப்ரேட்டர் மிஷின் உள்ளிட்டவைகளை வழிப் பறி செய்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை மீராப்பள்ளித் தெருவை சேர்ந்தவர் சேட்டு .. இவர் அதே பகுதியில் பரோட்டா கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கரிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன், கே.பஞ்சங்குப்பம் கிராமத்தைச்சேர்ந்த பரமசிவம் இருவரும் சாப்பிட்டுவிட்டு பணம் தராமல் சென்றனர். பணம் கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.


இதுகுறித்து சேட்டு கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து மணிகண்டன், பரமசிவத்தை தேடிவந்தனர்.ஏ.எஸ்.பி., துரை உத்தரவின்பேரில் போலீசார் கரிக்குப்பத்தில் நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர். அந்த வழியாக வந்த மணிகண்டன், பரமசிவத்தை பிடித்து விசாரணை செய்ததில் பல்வேறு வழிப்பறி சம்பவங்களில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. புதுச்சத்திரம் அடுத்த ஆலப்பாக்கம் ரயில்வே கேட் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த புதுச்சேரி முதலியார்பேட்டையைச் சேர்ந்த விஜயரங்கம், அவரது மனைவி மஞ்சுளாவிடம் வீச்சரிவாளை காட்டி கழுத்தில் இருந்த 10 சவரன் தாலியை பறித்தது. சின்னகுமட்டி அருகே கடலூர் முதுநகரை சேர்ந்த சீனுவாசன் என்பவர் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது அரிவாளை காட்டி செயின், குருமாத், மோதிரம் உள்ளிட்ட 5 சவரன் நகை, பஞ்சங்குப்பம் தனியார் அனல்மின் நிலையத்தில் இருந்த வைப்ரேட்டர் மிஷின் உள்ளிட்ட பொருட்களை திருடி வீட்டில் வைத்திருப்பதாக ஒப்புக்கொண்டனர்.இதனையடுத்து மணிகண்டன், பரமசிவம் வீட்டில் சோதனை செய்ததில் 15 சவரன் நகை, வைப்ரேட்டர் மிஷின், இரண்டு வீச்சரிவாள், ஹீரோ ஹோண்டா மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

No comments:

Post a Comment