Islamic Widget

February 18, 2011

பரங்கிப்பேட்டை அருகே விபத்து

மாசிமக தீர்த்தவரியை முன்னிட்டு புவனகிரி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்களை C.புதுப்பேட்டை கடற்கரைக்கு அழைத்துசென்ற தனியார் வாகனம் பரங்கிப்பேட்டை கடலூர் சாலையில் (குட்டியாண்டவர் கோயில்)அருகே விபத்துக்குள்ளானது.புதுப்பேட்டை கடற்கரையிலிருந்து ஊருக்கு திரும்பிசென்ற வேன் சாலையில் சென்றுக்கொண்டிருக்கும் போது சாலையை கடக்கமுயன்ற ஆட்டின் மீது மோதாமலிருக்க திருப்பும்போது அருகிலிருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்தவாகனத்தில் அளவுக்கு அதிகமாக பயணிகளையும்,வேகத்துடனும் சென்றதாக சம்பவஇடத்தில் இருந்தவர்கள் தெரிவித்தார்கள். இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.25க்கும்,மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.அவர்கள் அனைவரும் பரங்கிப்பேட்டை அரசுமருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டு மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துசெல்லப்பட்டனர்.காயமடைந்தவர்களை கடலூர்க்கு கொண்டுச்செல்ல "இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் "ஜமாஅத் ஆம்புலன்ஸ், மற்றும் தனியார் வாகனங்களை ஏற்பாடுசெய்தார்.


நன்றி: mypno

No comments:

Post a Comment