Islamic Widget

February 28, 2011

சிதம்பரத்தில் அரசு பஸ்சில் தம்பதியிடம் நகை கொள்ளை

சிதம்பரம் : சிதம்பரம் அரசு பஸ்சில் தம்பதியிடம் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை திருடிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். சீர்காழி அடுத்த அரசரைச் சேர்ந்தவர் நடராஜன். திருவாரூர் அரசு போக்குவரத்துக் கழக உதவி இன்ஜினியர். இவரது மனைவி ரம்யா. இருவரும் நேற்று முன்தினம் உடல் நிலை சரியில்லாத தங்களது குழந்தையை மருத்துவமனையில் காண்பிக்க புதுச்சேரி வந்தனர். பின்னர் புதுச்சேரியிலிருந்து இரவு கிளம்பினர்.
 இரவு நேரம் என்பதால் ரம்யா தனது நகைகளை கழற்றி பர்சில் வைத்து கைப்பையில் வைத்தார். விழுப்புரம் கோட்ட அரசு பஸ்சில் சிதம்பரம் பஸ் நிலையம் வந்ததும் ரம்யா தனது கைப்பையில் இருந்த பர்சை காணாதது கண்டு திடுக்கிட்டார். திருடு போன நகைகளின் மதிப்பு 3 லட்சம் ரூபாய் ஆகும். நகையை பறிகொடுத்த ரம்யாவும், அவரது கணவர் நடராஜனும் நேற்று காலை சிதம்பரம் நகர குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கச் சென்றனர். ஆனால், ஸ்டேஷனில் யாரும் இல்லாததால் இரவு வரை அலைகழித்த பின்னரே புகாரை பெற்றனர்.


Source: Dinamalar

No comments:

Post a Comment