Islamic Widget

February 28, 2011

கேரளாவில் குண்டு வெடித்து 5 பேர் பலி

கேரளாவில் கள்ளத்தனமாக நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டபோது, எதிர்பாராதவிதமாக குண்டு வெடித்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே நாதபுரம் என்னும் கிராமத்தில் ரகசிய இடத்தில் கள்ளத்தனமாக வெடிகுண்டுகள் தயாரித்து வந்துள்ளனர்.
நேற்று இரவு தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது சற்றும் எதிர்பாராதவிதமாக சக்தி வாய்ந்த குண்டு ஒன்று வெடித்ததில் 3 பேர் அதே இடத்தில் பலியாகி உள்ளனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.படுகாயம் அடைந்த ஐந்து பேரும் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிர் இழந்தனர்.
போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.


Source:inneram

No comments:

Post a Comment