Islamic Widget

February 19, 2011

சாலை விபத்து: பரங்கிப்பேட்டையில் சாலை மறியல்

பரங்கிப்பேட்டை: மாசிமக தீர்த்தவாரியை முன்னிட்டு புவனகிரி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்களை C.புதுப்பேட்டை கடற்கரைக்கு அழைத்துசென்ற தனியார் வாகனம் பரங்கிப்பேட்டை கடலூர் சாலையில் (குட்டியாண்டவர் கோயில்) அருகே விபத்துகுள்ளானது. இந்த சாலை விபத்தில் 3 பெண்கள் உள்பட 30 படுகாயம் அடைந்தனர்.

இதில் படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் மருத்துவமனைக்கு பூட்டு போடும் போரட்டமும் மற்றும் சஞ்சிவிராயர் கோயில் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கபட்டது. பின்னர் காவல்துறையினர் வந்து சமாதானம் பேச்சு வார்தை நடத்தியதை யொட்டி மறியல் வாபஸ் பெறபப்ட்டது. இதனால் பரங்கிப்பேட்டையில் சிறது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.


நன்றி: tntjpno

No comments:

Post a Comment