Islamic Widget

February 19, 2011

பரங்கிப்பேட்டை : வேன் புளிய மரத்தில் மோதி விபத்து 3 பேர் பலி, 30 பேர் காயம்!


பரங்கிப்பேட்டை : வேன் புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பெண்கள் உடல் நசுங்கி இறந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்த புதுப்பேட்டை கடற்கரையில் நடந்த மாசிமகத் திருவிழாவில் பங்கேற்க பரங்கிப்பேட்டை, புவனகிரி, புதுச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பொதுமக்கள் குவிந்தனர். புவனகிரி பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றிச்செல்ல டி.என். 31. ஏ.ஒய்-2173 எண்ணுள்ள வேன் "டிரிப்' அடித்தது.
                         

                         

புதுப்பேட்டை கடற்கரையில் இருந்து 30க்கும் மேற்பட்டோருடன் வேன் புவனகிரி நோக்கி வந்து கொண்டிருந்தது. டிரைவர் முருகதாஸ் வேனை ஓட்டினார். பரங்கிப்பேட்டை அடுத்த குட்டியாண்டவர்கோயில் அருகே சாலை யில் ஆடு குறுக்கே ஓடியதால் வேனை திருப்பியபோது எதிர்பாராத விதமாக சாலையோர புளிய மரத்தில் வேன் மோதி கவிழ்ந்தது. இவ்விபத்தில் புவனகிரி அடுத்த ஆலம்பாடி ராமு மனைவி சாவித்திரி (55) சம்பவ இடத்திலேயே இறந்தார். பு.முட்லூர் காந்திநகர் மாசிலாமணி மனைவி பிரேமாவதி (38), பெருமாத்தூர் செல்வம் மனைவி செல்வி (45), பு.முட்லூர் காந்தி நகர் தீபலட்சுமி (15), குமுடிமுளை கோபால் (35), அம்சவள்ளி (30), பூபதி (55), ஜெகன்நாதன் (55), கனிமொழி (10) உட்பட 38 பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். வரும் வழியில் பிரேமாவதி, செல்வி ஆகியோர் இறந்தனர். கலெக்டர் சீத்தாராமன், எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் நேரில் சென்று காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர். பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் புகழேந்தி வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்.


Source: Dinamalar, Photo: tntjpno

No comments:

Post a Comment