Islamic Widget

February 14, 2011

சிதம்பரம் பஸ் நிலைய கடைகள் அடைப்பு

சிதம்பரம் : சிதம்பரம் சப் இன்ஸ்பெக்டரை கண்டித்து பஸ் நிலையத்தில் வியாபாரிகள் கடையடைப்பு செய்தனர். சிதம்பரம் நகரில் இரவு 11 மணிக்கு மேல் கடைகளை அடைக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. நேற்று பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சென்ற சப் இன்ஸ்பெக்டர் பாபு, பஸ் நிலையத்தில் திறந்திருந்த ஒரு பெட்டிக்கடையை அடைக்கும்படி கூறினார்.
மேலும் ரோந்து பணி முடித்து விட்டு வரும்போதும் கடை திறந்திருந்ததால் ஆத்திரமடைந்து லத்தியால் தட்டிய போது கடையில் இருந்த பாட்டில்கள் உடைந்தன. இதனை கண்டித்து பஸ் நிலையத்தில் நேற்று காலை வியாபாரிகள் கடையடைப்பு நடத்தினர். அதனை தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பிறகு கடைகள் 10 மணியளவில் திறக்கப்பட்டன.

Source: Dinamalar

No comments:

Post a Comment