Islamic Widget

January 04, 2011

94 வயதில் தந்தையான இந்திய விவசாயி!

94 வயதில் குழந்தை ஒன்றுக்கு தந்தையாகி உலகின் மிக வயதான தந்தை என்ற பெயரை இந்திய விவசாயி ஒருவர் பெற்றுள்ளார்.ஹரியாணா மாநிலத்தின் கர்கோடாவைச் சேர்ந்த ராமஜித் ராகவ் என்ற 94 வயது முதியர் தன்னுடைய 50 வயது மனைவியின் மூலம் ஆண் குழந்தை ஒன்றுக்கு தந்தையாகி உள்ளதாக டெய்லி மெயில் என்ற நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
விவசாயியான ராமஜித் ராகவும் அவரு மனைவியும் தங்களது புதிய குழந்தையான கரம்ஜித் தங்களுக்கு கடவுள் அளித்த பரிசு என்று கூறியுள்ளனர்.தினமும் மூன்று லிட்டர் பால் குடித்து வருவதும் அரைக் கிலோ வெண்ணெய் சாப்பிட்டு வருவதும்தான் தாம் இன்றும் இளமையாக இருப்பதற்குக் காரணம் என்று நம்புகிறார் ராமஜித்.கடந்த ஒரு மாதத்திற்கு முன் பிறந்த இந்தக் குழந்தை சகுந்தலாவுக்கு சுகப் பிரவசம் மூலம் பிறந்தது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
கடந்த 2007 ஆம் ஆண்டு 90 வயதில் 21 ஆவது குழந்தைக்கு தந்தையாகி இருந்த நானு ராம் ஜோகி என்பவர்தான் இதுவரை உலகிலேயே வயதான தந்தை என்று அறியப்பட்டு வந்தார். தற்போது அவரிடம் இருந்து அந்தப் பெயரைப் பறித்துள்ளார் விவசாயி ராமஜித் ராகவ்.

 
Source:.inneram

No comments:

Post a Comment