Islamic Widget

December 19, 2010

குண்டு வெடிப்புக் குற்றவாளியைக் கொலை செய்த 3 ஆர்.எஸ்.எஸ்.ஸினர் கைது!

அஜ்மீர் தர்கா மற்றும் ஹைதராபாத் குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த சுனில் ஜோஷி என்பவரைக் கொலை செய்ததாக ஹர்ஷத் சோலங்கி உள்ளிட்ட மூன்று ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரை கைது செய்துள்ளதாக ராஜஸ்தான் மாநில காவல்துறை கூறியுள்ளது.


அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு தொடர்பாக சோலங்கியை ஏற்கனவே ராஜஸ்தான் மாநில தீவிரவாத எதிர்ப்புப் படையினர் கைது செய்துள்ளனர். இவர் தவிர தேவாஸைச் சேர்ந்த வாசுதேவ் பர்மர் மற்றும் இந்தூரைச் சேர்ந்த ஆனந்த் ராஜ் என்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுனில் ஜோஷி கொலை தொடர்பாக ஐந்து பேரை மாநிலக் காவல்துறையினர் தேடி வருகின்றனர். மேலும் இருவர் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட இம்மூவரும் முதன்மை ஜுடிஷியல் மாஜிஸ்ட்ரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு டிசம்பர் 30ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டனர். இவர்கள் தவிர மெஹுல் மற்றும் ரமேஷ் ஆகியோரை டிசம்பர் 24ஆம் தேதிவரை போலீஸ் காவலில் வைத்து விசாரணை செய்யவும் மாஜிஸ்ட்ரேட் அனுமதி அளித்துள்ளார்.
சுனில் ஜோஷியைத் தாம்தான் கொலை செய்ததாக சோலங்கி ஒப்புக் கொண்டதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment