அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய பாபர் மசூதி - ராமர் ஜென்ம பூமி விவகாரத்தில் நிலத்தின் உரிமை குறித்து அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய இந்து மகாசபை முடிவு செய்துள்ளது.
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் திங்கள் கிழமையன்று மேல் முறையீடு செய்வோம். மாபெரும் ராமர் கோயில் கட்டுவதற்காக சர்ச்சைக்குரிய நிலம் முழுவதும் கிடைக்கும் வரை நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம் என்று இந்து மகாசபை உறுப்பினர் கம்லேஷ் திவாரி சனிக் கிழமையன்று டில்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறினார்.அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஏற்கனவே ஜம்இய்யத் உலமா - இ - இந்த் என்ற அமைப்பும் சுன்னி வக்ஃப் வாரியமும் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
- திருச்சூர்: கேரளாவில் தமிழக மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- ஜூன் -4ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு
- பாபர் மசூதி இடிப்பு தினம் - ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
- பரங்கிப்பேட்டையில் தீ விபத்து நிவாரண உதவி!
- வெளிநாட்டு மோகம்... தீராத சோகம்...
- பசுபதி பாண்டியன் கொலை - தென் மாவட்டங்களில் பதற்றம்: பாதுகாப்பு அதிகரிப்பு
- பரங்கிப்பேட்டை அன்னங்கோயில் முகத்து வாரம் முழுவதும் தூர்ந்து நாள்தோறும் ரூ.50 லட்சம் இழப்பு!
- புயல் நிவாரணம்: விண்ணப்பிக்க புகார் மையம்
- சிதம்பரம் சாலையில் பஸ்-லாரி மோதல்: 12 பேர் காயம்
- பிரணாப் முகர்ஜியின் வெற்றி வாய்ப்பை தடுக்கும் ஒரே நபர் அப்துல் கலாம்தான் !
No comments:
Post a Comment