Islamic Widget

July 21, 2010

தனியே பிரிந்தது ரயில் இன்ஜின்; பெரிய விபத்து தவிர்ப்பு


சங்ரூர் (பஞ்சாப்), பஞ்சாப் மாநிலம் சங்ரூர் அருகே செவ்வாய்க்கிழமை நடக்கவிருந்த பெரிய ரயில் விபத்து பயணியின் எச்சரிக்கையால் தவிர்க்கப்பட்டது. ஜம்முவிலிருந்து கன்னியாகுமரி செல்லும் ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் சங்ரூர் அருகே 100 கி.மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் வந்துகொண்டிருந்தது. அப்போது ரயில் இன்ஜினும், அதற்கு அடுத்துள்ள இரு பெட்டிகளும் தனியே பிரிந்து செல்வதை பார்த்த பயணி ஒருவர் உடனடியாக அபாய சங்கிலியை இழுத்தார்.

அபாயத்தை உணர்ந்த ரயில் டிரைவர் அருகில் இருந்த லெஹ்ராககா ரயில் நிலையத்தில் வண்டியை நிறுத்தினார். இரண்டு பெட்டிகளை இணைக்கும் கொக்கி உடைந்துபோனதால் இந்த விபரீதம் ஏற்பட்டது தெரியவந்தது. பின்னர் கோளாறு சரிசெய்யப்பட்டு ரயில் தாமதமாக புறப்பட்டது.தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும் இதில் சதிவேலை ஏதும் இல்லை என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment