Islamic Widget

August 21, 2012

லால்பேட்டை அருகே நடந்த விபத்தில் ஒருவர் மரணம். ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!


லால்பேட்டை மினாதெருவில் இருக்கும் சைலப்பை அப்துல் ரவூப் மகன் ஃபவ்ஜுல் அமீன்,மேலத் தெருவில் இருக்கும் கோஸ் அமானுல்லாஹ்வின் மகன் முஹம்மது ஃபஹத் ஆகிய இருவரும் நேற்று மாலை ௪ மணியளவில் மோட்டார் சைக்கிளில் லால்பேட்டை அருகில் உள்ள திருச்சின்னபுரத்தில் இருந்து ஊர் நோக்கி வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த மற்றோர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.உடனடியாக சிதம்பரம் அண்ணாமலை நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் இதில் ஃபவ்ஜுல் அமீன் (வயது18) சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டைஎக்ஸ்பிரஸ்.காம் இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.
பலத்த காயத்துடன் முஹம்மது ஃபஹது புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் பூரண குணமடைந்து வீடு திரும்ப அனைவரும் பிரார்த்திக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
தொடர்ந்து இது போன்ற விபத்துக்கள் மகிழ்ச்சியான தினங்களில் நடப்பது அனைவரையும் மிகுந்த கவலைக்குள்ளாக்கி விடுகிறது.எதிர் காலங்களில் நமது இளைஞர்கள் சாலை விதிகளை கடைபிடித்து மிகுந்த கவனத்துடன் பயணம் செய்வது ஒன்றே இது போன்ற அசம்பாவிதம் நிகழாமல் இருக்க வழி செய்யும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுமென அனைவரையும் நமது இணைய தளத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment