கடலூர் ;சவ ஊர்வலத்தில் பட்டாசு வெடித்தபோது 3 பேர் உடல் கருகினர்
கடலூர் முதுநகரை
அடுத்த அலக்கரையை சேர்ந்தவர்கள் பாலு (வயது 49), மணி (60), விநாயகமூர்த்தி. நேற்று
அந்த பகுதிகளில் சென்ற சவ ஊர்வலத்தில் இவர்கள் 3 பேரும் கலந்து கொண்டனர். அந்த
ஊர்வலத்தில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. சில பட்டாசுகள் திசை திரும்பி தவறாக
சென்றதால் பாலு, மணி, விநாயகமமூர்த்தி ஆகியோர் உடல் கருகி
படுகாயமடைந்தனர்.
உடனே அந்தசவ
ஊர்வலத்தில் சென்ற பிறர் அந்த 3 பேரையும் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு
அனுப்பி வைத்தனர். காயமடைந்த 3 பேரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
No comments:
Post a Comment