தமிழகத்தில்
கடந்த சில ஆண்டுகளாக மின்தடை அமலில் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக காற்றாலை
மின்சார உற்பத்தி குறைந்ததால் மின்சப்ளை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்
மாவட்டத்தில் ஏற்கனவே 5 அல்லது 6 மணி நேரம் மின்தடை நடைமுறைப்
படுத்தப்பட்டிருந்தது. ஆனால் கடந்த 3 நாட்களாக தினமும் 12 மணி நேரம் மின்சார
வினியோகம் தடை செய்யப்பட்டது.
இரவில் மட்டும் சுமார் 5 மணி நேரம் மின் சப்ளை பாதிக்கப்பட்டது. இதனால் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அனைவரும் அவதிப்பட்டனர்.
No comments:
Post a Comment