கடலூர்:கடலூரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்கள் இருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.கடலூர் காவல் கட்டுப்பாட்டு அறையில் போலீஸ்காரர்களாக பணிபுரிந்து வருபவர்கள் பாலகுமரன், 45; ஜெயச்சந்திரன், 35. இருவரும் சக போலீசாருடன் நேற்று மாலை சீமாட்டி சிக்னல் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது போலீஸ் வாகனத்தின் உள்ளே பாலகுமரனுக்கும், ஜெயச்சந்திரனுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.உடன் அருகில் இருந்த போலீசார் இருவரையும் தடுத்து சமாதானம் செய்தனர்.தகராறில் காயமடைந்த ஜெயச்சந்திரன் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இச்சம்பவம் குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.மக்கள் நடமாட்டம் மிகுந்த சீமாட்டி சிக்னல் அருகே ரோந்து பணி
யில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்கள் இருவரும் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment