Islamic Widget

June 06, 2011

த.மு.மு.க., அலுவலகத்திற்கு தீ வைப்பு: போலீஸ் விசாரணை

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் த.மு.மு.க., அலுவலகத்திற்கு தீ வைக்கப்பட்டதால் பதட்டம் நிலவியது. கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் முஸ்லிம் கருமாரத் தெருவில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் கூரை கொட்டகையை நேற்று முன்தினம் இரவு சில விஷமிகள் தீயிட்டு கொளுத்தினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதைக் கண்டு அவர்கள் தப்பியோடினர்.
 கடந்த வாரம் த.மு.மு.க., பிரமுகர்களுக்கும், வேறு சிலருக்கும் தகராறு நடந்தது. போலீசார் இருதரப்பிலும் வழக்குப்பதிந்தனர். அவர்கள் முன்விரோதத்தில் அலுவலகத்தை கொளுத்தினார்களா என போலீசார் விசாரித்து வருகின்றனர். பண்ருட்டி டி.எஸ்.பி., சரவணகுமார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டார். நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப் பதிந்து அலுவலகத்திற்கு தீ வைத்தவர்களை தேடி வருகின்றனர். த.மு.மு.க, அலுவலகம் தீ வைக்கப்பட்டதால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

No comments:

Post a Comment