Islamic Widget

May 04, 2011

ஆசிரியை வீட்டில் புகுந்து ரூ.1.5 லட்சம் நகை திருட்டு!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், பள்ளி ஆசிரியை வீட்டில் புகுந்து, ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை திருடிச் சென்ற துணிகர சம்பவம் நடந்துள்ளது.
சிதம்பரம், கீழ வீதியைச் சேர்ந்தவர் குணசேகரன். அவரது மனைவி மாலினி. வீட்டு அருகே உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். நேற்று முன்தினம் திங்கள் இரவு நகைகளை ஒரு சில்வர் பாத்திரத்தில் போட்டு பத்திரமாக வைத்து விட்டு தூங்கச் சென்றார். நேற்று செவ்வாய் காலை எழுந்து பார்த்தபோது, நகைகள் காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார்.திருடன் மாடிப்படி வழியாக உள்ளே இறங்கி, நகைகளை திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது. மூன்றரை பவுன் செயின் உட்பட மொத்தம் 10 பவுன் நகைகள் திருடுபோயுள்ளது. அதன் மதிப்பு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆகும் இதுகுறித்து ஆசிரியை மாலினி கொடுத்த புகாரின் பேரில், சிதம்பரம் நகர குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment