கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், பள்ளி ஆசிரியை வீட்டில் புகுந்து, ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை திருடிச் சென்ற துணிகர சம்பவம் நடந்துள்ளது.
சிதம்பரம், கீழ வீதியைச் சேர்ந்தவர் குணசேகரன். அவரது மனைவி மாலினி. வீட்டு அருகே உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். நேற்று முன்தினம் திங்கள் இரவு நகைகளை ஒரு சில்வர் பாத்திரத்தில் போட்டு பத்திரமாக வைத்து விட்டு தூங்கச் சென்றார். நேற்று செவ்வாய் காலை எழுந்து பார்த்தபோது, நகைகள் காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார்.திருடன் மாடிப்படி வழியாக உள்ளே இறங்கி, நகைகளை திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது. மூன்றரை பவுன் செயின் உட்பட மொத்தம் 10 பவுன் நகைகள் திருடுபோயுள்ளது. அதன் மதிப்பு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆகும் இதுகுறித்து ஆசிரியை மாலினி கொடுத்த புகாரின் பேரில், சிதம்பரம் நகர குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.May 04, 2011
ஆசிரியை வீட்டில் புகுந்து ரூ.1.5 லட்சம் நகை திருட்டு!
Subscribe to:
Post Comments (Atom)
- குடல்வால்(APPENDICITIS) குணமாக எளிய மருத்துவம்
- பாதுகாப்பற்ற நிலையில் பரங்கிப்பேட்டை படகு நிலையம்
- முஸ்லிம் கைதிகளிடம் பாரபட்சம்: விசாரணை நடத்த பிரதமர் உத்தரவு!
- சவூதி பொதுமன்னிப்பு:புனித யாத்திரை மற்றும் சுற்றுலா விசா காலாவதியானவர்களுக்கு மட்டும்!!!
- வேட்புமனுதாக்கல் - இன்று கடைசி!
- இண்டெர்நெட் வாய்ப் கால்:அடுத்த ஆண்டு முதல் துவங்கும் - எடிசலாத்
- 20 ஆண்டுக்கு முன்பு உறைய வைத்த கருமுட்டை மூலம் குழந்தை பெற்ற பெண்
- வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற ஏர் இந்தியா விமானிகள் டெல்லி உயர்நீதிமன்றத்திடம் ஒப்புதல்
- சட்டப்பேரவை முற்றுகை-அணு உலை எதிர்ப்பாளர்கள் கைது!
- சிதம்பரம் மேலவீதி அகலப்படுத்தும் பணி கிடப்பில் போடப்பட்டதால் மக்கள் பாதிப்பு
No comments:
Post a Comment