கடலூர் : புதுச்சேரியில் எதிர்கட்சிகள் நடத்திய பந்த் காரணமாக கடலூரில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. புதுச்சேரி கவர்னர் இக்பால் சிங்கை மாற்றக்கோரி அ.தி.மு.க., உள்ளிட்ட எதிர்கட்சிகள் நேற்று புதுச்சேரியில் "பந்த்' அறிவித்திருந்தன. இதனால் கடலூரில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் புதுச்சேரிக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
சென்னை மற்றும் புதுச்சேரி செல்லும் பஸ்கள் கடலூர் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை செக்போஸ்ட் முதல் தமிழக போலீசார் கான்வாய் முறையில் தமிழக எல்லையான காட்டுக்குப்பம் வரை அழைத்துச் சென்றனர். அங்கிருந்து புதுச்சேரி மாநில போலீசார் புதுச்சேரிக்கு அழைத்துச் சென்றனர். இதே முறையில் நேற்று காலை முதல் பஸ்கள் இயக்கப்பட்டன.
சென்னை மற்றும் புதுச்சேரி செல்லும் பஸ்கள் கடலூர் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை செக்போஸ்ட் முதல் தமிழக போலீசார் கான்வாய் முறையில் தமிழக எல்லையான காட்டுக்குப்பம் வரை அழைத்துச் சென்றனர். அங்கிருந்து புதுச்சேரி மாநில போலீசார் புதுச்சேரிக்கு அழைத்துச் சென்றனர். இதே முறையில் நேற்று காலை முதல் பஸ்கள் இயக்கப்பட்டன.
No comments:
Post a Comment