Islamic Widget

February 20, 2011

குஜராத் முஸ்லிம்களை புறக்கணிக்கும் மோடி!

குஜராத்தில் முதலமைச்சர் நரேந்திர மோடியின் சிறப்பான நிர்வாக திறனால் அம்மாநிலம் அபார வளர்ச்சியை எட்டிபிடித்து வருவதாக பல்வேறு தரப்பினரும் புகழ்ந்து கொண்டிருக்கையில், சத்தமில்லாமல் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் அம்மாநிலத்தின் ஒரு அங்கமான இஸ்லாமிய மக்களின் பொருளாதார மற்றும் வாழ்க்கை தரம் வெகுவாக பின்தங்கி கிடப்பதாக தெரியவந்துள்ளது.
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பின்னர் நடந்த இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரம், முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை கிளப்பியிருந்தன.மேலும் அவரது அரசியல் வாழ்வில்,குஜராத் கலவரம் ஒரு கரும் புள்ளியாகவே அமைந்தது. இந்நிலையில் குஜராத் கலவர சர்ச்சை ஓய்ந்து, மீண்டும் ஆட்சியை பிடித்த மோடி,தம் மீதான கலவர கொலை களங்கத்திற்கு ஈடுகட்டும் விதமாக நிர்வாகத்தில் வெகுவாக கவனம் செலுத்தினார். சாதுரியமாக பேசியும்,செயல்பட்டும் குஜராத்திற்குள் முதலீட்டாளர்களையும்,தொழிலதிபர்களையும் கொண்டு வந்ததால் இன்று அம்மாநிலம் பொருளாதாரத்தில் மட்டுமின்றி பல துறைகளிலும் அபார வளர்ச்சியை எட்டி பிடித்துள்ளது. ஆனால் இந்த அபார வளர்ச்சியால், அம்மாநில மக்கள் தொகையில் கணிசமாக உள்ள வறுமையில் வாடும் நலிந்த பிரிவு மக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை.இவர்களுக்கும்,இதர பெரும்பான்மை இந்துக்களுக்கும் இடையே வருவாய் விடயத்தில் மிகப்பெரிய அளவிலான இடைவெளியும், ஏற்ற இறக்கமும் - அதாவது வருவாய் சமத்துவின்மை- காணப்படுவதாக சமீபத்தில் நடத்தப்பட ஆய்வில் தெரியவந்துள்ளது. 'குஜராத்தின் வளர்ச்சியும், சமூக-மத வேறுபாடுகளும்' என்ற தலைப்பில் பிரபல பொருளாதார வல்லுனர் அபுலேஷ் ஷரீப், இந்த ஆய்வை நடத்தியுள்ளார்.இஸ்லாமியர்களின் சமூக மற்றும் பொருளாதார நிலைகளை விளக்கும் சச்சார் கமிட்டி அறிக்கை, தேசிய பொருளாதார ஆய்வு செயல்முறை குழு (National Council for Applied Economic Research -NCAER) மற்றும் தேசிய மாதிரி ஆய்வு மையம் (National Sample Survey Organisation -NSSO) போன்றவற்றின் அறிக்கைகளின் துணை கொண்டு இந்த ஆய்வை நடத்திய அவர், குஜராத் முஸ்லிம்களின் வாழ்க்கை தரத்தை பட்டியலிட்டுள்ளார்.

1 comment:

  1. சலாம்.
    சமத்துவின்மை - சமத்துவமின்மை

    ReplyDelete