Islamic Widget

January 21, 2011

மூன்று அமாவாசைக்கு பின் ஜெ., முதல்வராவது உறுதி: செல்வி ராமஜெயம்

சேத்தியாத்தோப்பு : மூன்று அமாவாசைக்கு பின் ஜெ., முதல்வராவது உறுதி என்று புவனகிரி எம்.எல்.ஏ., செல்வி ராமஜெயம் பேசினார். சேத்தியாத்தோப்பில் நடந்த எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று புவனகிரி எம்.எல்.ஏ., செல்விராமஜெயம் பேசியதாவது :
 இந்திய அரசியல் வரலாற்றில் எந்த தலைவருக்கும் இல்லாத வகையில் மறைந்து 14 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட பிரதிபலன் பாராமல் ஏழை தொண்டர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப எம்.ஜி.ஆர்., பிறந்த நாளை அவரது தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். தி.மு.க., அரசு பொறுப்பேற்று நாலரை ஆண்டுகளில் மக்கள் சொல்ல முடியாத அளவிற்கு துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர். விலைவாசி உயர்ந்து கொண்டே வருகிறது. சட்டசபையில் அ.தி.மு.க., வினர் எதை பேசினாலும் உடனே அவை குறிப்பிலிருந்து நீக்கி விடுகிறார்கள். கருணாநிதி ஆட்சியை ஓட, ஓட விரட்ட மக்கள் தயாராகி விட்டனர். தி.மு.க., என்கிற திருட்டு பூனைக்கு யார் மணி கட்டுவது என்று மக்கள் காத்திருக்கின்றார்கள். தி.மு.க.,வை வீழ்த்தும் ஒரே சக்தி ஜெ.,க்கு மட்டுமே உள்ளது என்பதை இப்போது எல்லோரும் கூறுகிறார்கள். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கியுள்ள கருணாநிதியின் குடும்ப மானம் காற்றில் பறக்கிறது. கருணாநிதியும் அவரது அமைச்சர்களும் கோடி, கோடியாக கொள்ளை அடித்த பணத்தை கொடுத்து ஓட்டுக்களை விலைக்கு வாங்கலாம் என்று திட்டம் போட்டுள்ளனர். தி.மு.க., ஆட்சியின் ஆயுட்காலம் முடிந்து விட்டது. இன்னும் மூன்று அமாவாசை வரை தான் இவர்கள் ஆட்டம் போடலாம் மூன்றாவது அமாவாசைக்கு பின் ஜெ., ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. இவ்வாறு செல்வி ராமஜெயம் எம்.எல்.ஏ., பேசினார்.


source: dinamalar

No comments:

Post a Comment