பரங்கிப்பேட்டை : புதுச்சத்திரம் அருகே தனியார் பஸ்சை பொதுமக்கள் சிறை பிடித்தனர். தம்பரத்தில் இருந்து புதுச்சத்திரத்திற்கு பூவாலை வழியாக தனியார் பஸ் சென்று வருகிறது.
திடீரென கடந்த நான்கு நாட்களாக பஸ் வரவில்லை. அரசு பஸ் மட்டும் அந்த வழியாக சென்று வருதால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், கட்டட தொழிலா ளர்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று காலை தனியார் பஸ் புதுச்சத்திரத்தில் இருந்து சிதம்பரம் செல்வதற்கு பூவாலைக்கு வந்தது. ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பஸ்சை வழிமறித்து சிறை பிடித்தனர். தகவலறிந்த புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் திருமால் சம்பவ இடத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். பஸ் தினமும் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து பஸ் விடுவிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Source:dinamalar
December 14, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- லால்பேட்டை- மானியம் ஆடூர் சாலை சீர்கேட்டால் பள்ளி மாணவர்கள் அவதி
- அயோத்தி வழக்கு பற்றி கருத்து: பழைய காயத்தை, அத்வானி கிளற வேண்டாம்- காங்கிரஸ் கண்டனம்
- சிதம்பரம் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
- நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முற்றுகை: 22 பேர் கைது
- ATM கார்டு மோசடியை தடுக்க புதிய உத்தி !
- ராம்தேவ் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
- தனியார் சொகுசு பேருந்து மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது:20 பேர் படுகாயம்!
- தங்கம் விலை அதிரடி உயர்வு!
- 8 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் மறு வாக்குப்பதிவு!
- மருத்துவ மாணவிக்கு செல்போனில் செக்ஸ் தொந்தரவு
No comments:
Post a Comment