காட்டுமன்னார்கோவில் கச்சேரி தெருவில் போலீஸ் நிலையம் அருகே பா.ஜ.க. சார்பில்
நீர் மோர் பந்தல் திறப்பு விழா நகர தலைவர் மணிகண்டன் தலைமையில் நடந்தது. ஒன்றிய
தலைவர் ராஜேந்திரன் மற்றும் பலர் பங்கேற்றனர். பந்தலுக்கு அருகில் டிஜிட்டல் பேனர்
வைக்கப்பட்டது. முன்னதாக அப்பகுதியில் நீர்மோர் பந்தல் திறக்க பேரூராட்சி நிர்வாகம்
அனுமதி வழங்கியும் போலீசார் அனுமதி வழங்கவில்லை.
இந்த நிலையில் நீர்-மோர் பந்தல் திறக்கப்பட்டதை அறிந்த போலீசார் அங்கு சென்று
அங்கிருந்த டிஜிட்டல் பேனரையும், நீர்மோர் பந்தலையும் அகற்றினர். இதனால்
போலீசாருக்கும் பா.ஜ.க.வினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த
பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment