பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டையில் மின்னணு தகவல் பலகை குறித்து மீனவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய தேசிய கடல் தகவல்கள் சேவை மையம் இணைந்து கடல் தகவல்கள் சேவைகளை மீனவர்களுக்கு அளித்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில்
சாமியார்பேட்டை, பரங்கிப்பேட்டை, மற்றும் முடசல் ஓடை ஆகிய மீனவ கிராமங்களில் இந்திய தேசிய கடல் தகவல்கள் அளிக்கக் கூடிய மின்னணு தகவல் பலகை அமைக்கப்பட்டுள்ளது. மின்னணு தகவல் பலகை மூலம் கிடைக்ககூடிய தகவல் குறித்து நேற்று பரங்கிப்பேட்டை பகுதி மீனவர்களுக்கு டாடா சமுதாய கூடத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
பரங்கிப்பேட்டை பேரூராட்சி துணைத்தலைவர் செழியன் தலைமை தாங்கினார். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் திட்ட அலுவலர் இளங்கோவன் வரவேற்றார். திட்ட ஒருங்கிணைப்பாளர் வேல்விழி திட்டம் பற்றி விளக்கி பேசினார். நிகழ்ச்சியில் அண்ணாமலைப் பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் சரவணக்குமார், கோபாலகிருஷ்ணன், வீரராஜ், கிராம தலைவர் பரமசிவம் பங்கேற்றனர்.
Source: Dinamalar
November 01, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 6 ஆண்டுகள் வரை சிறை. மத்திய அரசின் புதிய சட்டம்.
- துரோகமே செய்தாலும் காங்கிரஸை நான் மறவேன்....''-ததஜ!!!
- பரங்கிப்பேட்டை : நீர் உயிர் நச்சு கருத்தரங்கம்
- பரங்கிப்பேட்டையில் வத்தக்கரை எரிந்து சாம்பல்லனாது
- இறப்புச் செய்தி
- கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் போட்டியிடுவதைத் தடை செய்ய வேண்டும்: குரேஷி!
- கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் வெள்ளை அடிக்கும் பணி
- எனது மீட்சிக்காக எல்லாம் வல்ல ஆண்டவனை மனம் உருகிப் பிரார்த்தியுங்கள்! சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் ரிஸானா இறைஞ்சல்
- தொழிற்சாலையில் தீ : இந்தியர் உட்பட 11 பேர் பலி
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத் தலைவரின் மகள் வஃபாத் / Condolence Message from K-Tic
No comments:
Post a Comment