பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டையில் மின்னணு தகவல் பலகை குறித்து மீனவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய தேசிய கடல் தகவல்கள் சேவை மையம் இணைந்து கடல் தகவல்கள் சேவைகளை மீனவர்களுக்கு அளித்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில்
சாமியார்பேட்டை, பரங்கிப்பேட்டை, மற்றும் முடசல் ஓடை ஆகிய மீனவ கிராமங்களில் இந்திய தேசிய கடல் தகவல்கள் அளிக்கக் கூடிய மின்னணு தகவல் பலகை அமைக்கப்பட்டுள்ளது. மின்னணு தகவல் பலகை மூலம் கிடைக்ககூடிய தகவல் குறித்து நேற்று பரங்கிப்பேட்டை பகுதி மீனவர்களுக்கு டாடா சமுதாய கூடத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
பரங்கிப்பேட்டை பேரூராட்சி துணைத்தலைவர் செழியன் தலைமை தாங்கினார். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் திட்ட அலுவலர் இளங்கோவன் வரவேற்றார். திட்ட ஒருங்கிணைப்பாளர் வேல்விழி திட்டம் பற்றி விளக்கி பேசினார். நிகழ்ச்சியில் அண்ணாமலைப் பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் சரவணக்குமார், கோபாலகிருஷ்ணன், வீரராஜ், கிராம தலைவர் பரமசிவம் பங்கேற்றனர்.
Source: Dinamalar
November 01, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- லால்பேட்டை- மானியம் ஆடூர் சாலை சீர்கேட்டால் பள்ளி மாணவர்கள் அவதி
- நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முற்றுகை: 22 பேர் கைது
- அயோத்தி வழக்கு பற்றி கருத்து: பழைய காயத்தை, அத்வானி கிளற வேண்டாம்- காங்கிரஸ் கண்டனம்
- ATM கார்டு மோசடியை தடுக்க புதிய உத்தி !
- ராம்தேவ் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
- தனியார் சொகுசு பேருந்து மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது:20 பேர் படுகாயம்!
- சிதம்பரம் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
- மருத்துவ மாணவிக்கு செல்போனில் செக்ஸ் தொந்தரவு
- இறப்புச் செய்தி
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அறிவிப்பு
No comments:
Post a Comment