பாபர் மசூதி இடிப்பு வழக்கை நடத்தி வரும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 18ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
தன்னுடைய தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரி தத் ஷர்மா கோரியதன் பேரில், இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 18ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து கூடுதல் தலைமை மாஜிஸ்ட்ரேட் நீதிபதி விஷ்ணு பிரசாத் அகர்வால் உத்தரவிட்டதாக சிபிஐ வழக்கறிஞர் கூறினார்.
இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக, 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி பாஜக தலைவர் எல்.கே. அத்வானியின் பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த ஐபிஎஸ் அதிகாரி அஞ்சு குப்தா இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணைக்காக நீதிபதி அகர்வாலை அலாகாபத் உயர் நீதிமன்றம் நியமித்து பின் கடந்த 3 மாதங்களுக்குப் பின் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது குறிப்பிடத் தக்கது.
Source: inneram.com
October 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- திமுக-க்கு ஆதரவு: TNTJ வின் தேர்தல் நிலைபாடு
- "ஆட்டம் காணும்' டவுன் பஸ்கள்: ஆட்டோக்கள் பெருக்கத்தால் பரிதவிக்கும் கடலூர் பயணிகள்
- சென்னையில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிப்பு
- பரங்கிப்பேட்டையில் இஸ்லாமிய விழிப்புணர்வு பயான்
- ரியாத் விமான நிலையத்தில் சரக்கு விமானம் தரையிறங்கும் போது விபத்து
- விஜயகாந்த் குடிகாரர் அல்ல! - வடிவேலுவுக்கு நடிகர் மன்சூர் அலிகான் அறிவுரை
- அதிமுக வேட்பாளருக்கு ஓட்டு கேட்ட வடிவேலு : திமுகவினர் ஆவேசம் !
- நன்பன் நூா் அலி தி௫மணம்
- பரங்கிப்பேட்டையில் ஈகைத்திருநாள் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி
- டாஸ்மாக் கடையை இடம் மாற்ற கோரிக்கை

No comments:
Post a Comment