
முன்னதாக, ஹஜ் அமைச்சகக் கூட்டம் இருவாரங்களுக்குமுன் நடந்த போது, 25 பயணிகளுக்கும் குறைவான பயணியர் இருக்கையுடைய வாகனங்கள் மக்கா நகரினுள் நுழைய தடை விதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.இத்தடை அக்டோபர் 23 முதல் நவம்பர் 20 வரை நடைமுறையில் இருக்கும் என்று சொல்லப்பட்டது.
உம்ரா விசாவில் வந்து அதிகக் காலம் தங்கிவிட்டவர்களைத் தேடும் பணிக்காகவும் அணிகள் அமைக்கப்பட்டுள்ளன என்று சவுதி கடவுத்துறை அதிகாரி கர்னல்.முஹம்மது அல் சாலமி தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் பெண் பயணிகளைப் பரிசோதிக்க பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சொன்னார்.
Source: inneram.com
No comments:
Post a Comment