பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் காதல் ஜோடி தஞ்சமடைந்தனர்.பரங்கிப்பேட்டை பெரியதெருவைச் சேர்ந்தவர் ஹாஜா மொய்தீன். இவரது மகன் நியாஸ் அகமது, 21. சிதம்பரம் அடுத்த கீழமூங்கிலடி ராகவேந்திரா கல்லூரில் பி.சி.ஏ., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாமாண்டு படிக்கும் ஆயிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கற்பகம், 19. இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.இவர்களின் காதல் விவகாரம் கற்பகம் வீட்டிற்கு தெரிந்ததும் கற்பகத்தை அவரது சித்தி வீடான ஆயிபுரம் கிராமத்தில் தங்க வைத்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கற்பகம் அங்கிருந்து தப்பிச்சென்று நேற்று முன்தினம் காதலன் நியாஸ் அகமதுவுடன் நாகூர் தர்காவில் மதம் மாறி திருமணம் செய்து கொண்டார். பின் பரங்கிப்பேட்டை வந்த இருவரும் பாதுகாப்பு கேட்டு போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்தனர்.
No comments:
Post a Comment